ஓடி வா முருகா
By Admin - 04 Aug 2021 657 0


ஆறுமுகனே, அய்யனே
ஓடி வா செய்யோனே..
மஹாசேனா, மகேசன் சேனா,
கூட வா கந்தனே...
ஓடி வா முகனே..
தேடி தேடி,
அருள் பெற,
கண்டேன்
உன்னையே,
நீயே - குகனே,
என்றும் துணையே;
முருகனே வா வா,
என் பாலனே வா..
அழகும் நீயே,
வீரமும் நீயே,
திருநீறும் நீயே,
திருவருளும் நீயே,
என் முருகனே,
ஓடி வா என் பாலனே..
தேனின் சுவையும்,
பாலின் நிறமும்,
உலகின் பொருளும்
நீயே - என் வேலனே
வா என் குறை தீர்க்கவே.
ஈசன் மகனே,
மயில் வாகனனே,
ஆறு தலைகொண்ட,
அறுபடையப்பனே,
முருகனே ஓடி வா - என்
அப்பனே...
ஆதி அங்கம் கலந்து,
ஆதாரமாய் வந்தவனே,
மலைகளிலும் - நீரிலும்
கலந்திருப்பவனே - என்
சித்தனே - நீயே - முருகனே
ஓடி வா கந்தனே..
சிந்தனையில் உருவாகி,
நித்திரையில் உறவாடி,
உருவிலே கருவான
உறவே என் முருகனே..
அல்லல் தீர்க்கும்,
நல்லை செய்யும் - மகனே
என் அழகனே ஓடி வா,
என்னோடு சேரவா - முருகா..
வாழும் நொடிகள்,
கர்ம வினைகள் - தீர்க்க
கரம் தர ஓடி வா முருகா,
செய்த வினைகள் தீர,
அறியாத குறைகள் போக,
கருணை கொண்டு வா முருகா,
உன்னோடு சேரவா முருகா..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories

16 Mar 2025
உன் காலடி சுழலில்...
மெட்டி,உன் காலடி சுழலில், ஒலிக்கும் ஓசை..அழகானக் காதலும், ஊடலும் கதைப் பேசும் இடம்..நீயும், நானும்ஒன்றாய் சுழல்கின்ற பந்தம்மெட்டியின் சாட்சியாய் தொடங்...

06 May 2024
வாழ்க்கை
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்,வறண்டால் போகிறார்கள்,இறந்தால் அழுகிறார்கள்,மறுநாள் மறக்கிறார்கள்,இடம் யிங்கே பெரியது,மனங்களோ சிறியது !!!-கல்யாணராமன் நாகராஜ...

17 Feb 2021
முதுமை காதல்...
ரெண்டு காளை பூட்டிக்கிட்டு,கைய நானும் புடிச்சுகிட்டு,கூட்டி னானும் வந்தேனடி வண்டியிலே, மாட்டு வண்டியில..நீ வந்த நேரம்,எனக்கான பொன்நேரம்,உன் துணையாக, ந...