சில உணர்வுகள்
By Admin - 12 Jan 2025 159 0


அந்திமாலையின் அடைமழை நிறைந்த,
ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,
வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,
புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளி
அலைந்து அடங்கும் காற்றின் தாலாட்டலில்,
நினைவுகளின் நிழல் ஆடிய புதர்கூடத்தில்,
சத்தமின்றி பூக்கும் பூவின் ஓசை,
வண்டுகளின் ரீங்காரம், பறவையின் இசையும்...
தன் வீட்டின் முற்றத்தில், விளையாடும் தவளை,
சிறகில் பிறந்த இறகைப்போலே,
மண் எங்கும் மண் வாசனை
வாடியதெல்லாம் மீண்டும் துளிர்ந்தது..
நெடிய வயல்களும், செடிகளும், மரங்களும்,
பறவையும், ஓடும் ஆறும் - காற்றின் இராகத்திற்கு
தலை அசைத்து நன்றி சொன்னது பூமிக்கு,
இயற்கையின் அன்புக்கு மொழி தேவை இல்லை...
விழுந்தால் அம்மா சொல்வதும்,
வாடினால் அப்பா சொல்வதும்,
துவண்டால் தோள் சாய்வதும் - மனிதனுள்
விதைக்கப்பட்ட இயற்கையின் துகள் அது..
உணவு, உடை, இருப்பிடம், காற்று, பேசிக் கொள்ள
ஆயிரம் வார்த்தைகள், ஆண்டுகள் கடந்தாலும்
செயற்கை நுண்ணறிவால் என்றும் மாறாதது
நாம் இயற்கையோடு கொண்ட சில உணர்வுகள்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories

15 Oct 2021
அனிதாவும், அம்மாவும் ...
ஒரு வயது நிரம்பிய குழந்தை, அழுகை நிற்கவில்லை. கண்களில் கண்ணீரும், விழித்திரையில் ஏக்கமும், குரலில் வலியும், தழு தழுத்த மழலையில் ங்கா,ங்கா,ங்கா...என்று...

18 Mar 2024
வெள்ளையும், கருப்பும்...
எப்பொழுது, வெள்ளை அடித்தாலும்,தன் முகத்தில் - மீண்டும் கரி பூசிக்கொள்கிறதுவீட்டின் சமையல் அறை..வெள்ளைக்கும், கருப்புக்கும் - தீராதகாதல்...

29 Sep 2022
மோக்ஷம்
வேதங்கள் சாரமும் பக்தியின் ஸூக்தமும்ஞானத்தின் நீளமும் சாஸ்திரமும்உபநிஷமும்கிளை கதைகளாய்,தர்மமும்கர்மமும்பிணைந்துகாட்டியதுஅன்பென்றோ…ஆசை ...