பிச்சை
By Admin - 16 Jun 2022 52 0


அம்மையும் அப்பனும்
யார் கண்டார் - பிச்சை
வாழ்விலே பிச்சை யின்றி
யார் இருப்பார்...
இருப்பவனோ
உன்னிடம்
நெருங்கி வருவான்
இல்லாதவன்,
வெளியில்
யார் காண்பர்
என்னை போன்று
தோற்றம் கொண்டு
தான் தெரிவார்..
பெற்றவளும்,
பெற்றுக்கொடுத்தவளும்,
பெற்றடுத்தவளும்,
யார் துணை வருவார்..
போனதும் ஒரு நாள்
அழுகை வற்றி போகும்,
மறதியும்
மாமருந்து ஆகும்,
துணை
எதுவென்றி
தேடி...
இங்கே
பாத்திரம் தான்
அதன் சூத்திரம்
நீயும் அறிவாயோ...
பிச்சை என்னும்
வாழ்விலே - உள்ளே
பிச்சே கேட்பவனும்
வெளியே
என்னை காணாததும்
நீ அறிவாயோ..
அன்னம் தானம்
யாருக்கோ,
இங்கே காய்ந்து
கிடக்கும்
இந்த
பிண்டத்திற்கோ...
ஏன் இந்த
வாழ்வோ - என்றோ
யார் செய்த பாவமோ..
ஒரு வாய் பிண்டம்
இல்லை இங்கே,
தண்ணீரும் தர மனம்
இல்லை இங்கே...
கேள்விகள் கேட்க
மனம் அல்லாது
கல்லாகி
போனாயோ ..
கண் கொண்டும்
கால் கொண்டும்
கை கொண்டும்
வதனம் மெருகும்,
நண்ணு மனமே
இல்லையோ...
வெயிலும்,
மழையும்
எல்லாம் ஒன்றே,
மருந்தும்,
அருந்தும்
அல்லாது...
பிணியும்
சேராது...
இச்சை கொண்டவன்
நானே - மறு ஜென்மம்
ஆசை துறந்தேன்..
இந்த நொடியில்
ஜீவன் சென்றாலும்
ஒரு வாய் பசியாகி
போக அருள்வாயோ...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories

17 Feb 2021
முதுமை காதல்...
ரெண்டு காளை பூட்டிக்கிட்டு,கைய நானும் புடிச்சுகிட்டு,கூட்டி னானும் வந்தேனடி வண்டியிலே, மாட்டு வண்டியில..நீ வந்த நேரம்,எனக்கான பொன்நேரம்,உன் துணையாக, ந...

26 Apr 2021
அன்பு பழகு, அன்போடு பழகு...
கடவுளின் பெயர்களில் மதம் பிரிக்கப்பட்டதா,மதங்களின் அடிப்படையில் கடவுள் உருவாக்கப்பட்டதா;சாதிகளின் தலைவனாய் மதங்கள் உருவானதா,மதங்களின் அ...

04 Jul 2021
ஒரு குப்பை, ஒரு பொக்கிஷம்...
இரவு பத்து மணி..ஏங்க, நாளைக்கு காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு சீக்கிரமா கல்யாணத்துக்கு கிளம்பனும்.. தூங்கிறக்கூடாது.. எங்க தூங்கறது கனகு, வண்டி ச...