மனமே
By Admin - 16 Apr 2023 348 0


தரை தொடும்
முகில் அழுவதில்லை..
நதி சேர்ந்து
கடல் கலந்து
மீண்டும் துளிரிதே..
அவ்,
விதி என்றோ
கலங்குவதில்லை ?
மதி கொண்ட
மானுடர்
மயங்குவதென்ன !!!
நீ செய்வதை - பிரித்து,
இடார் க்கொண்டு,
தீர்ப்பு சொல்ல வானத்தில்
யாரும் யில்லை...
சித்தாந்தம் அறியாய்,
அந்தம் அறியோம்
வேதாந்தம் அறியோம்,
அந்தம் அறியாய்...
நித்திரை கொள்ளாத
மனமே - நீ
சற்று ஓய்வு கொள்...
கன நொடியில்,
பல தூரங்கள்
செல்லும் உன்
வேகத்திற்கு - நீ
ஓய்வுகொடு....
வானில் வரும்
தாரகை தரை
தொடும் நொடியில்
நீ தொடா தூரத்தில்
சென்றுவிட்டால் - நான்
எந்த சிந்தனைக்கு
வேள்வி வைப்பேன் ?
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories

23 Aug 2024
யார்
கூட்டத்தில் யார் என்றுநீ உணரப்படுவாய்..தனிமையில் யார் என்றுநீ அறியப்படுவாய்…...

11 Sep 2022
வெள்ளை
சில நொடிகள் இமைக்காமல்,கடிகாரத்தின் முட்கள் நகர்வதை பார்க்கும் பொழுது காலத்தில் வேகத்தை கண்டு பயம் தொற்றி கொண்டது.....

17 Feb 2021
முதுமை காதல்...
ரெண்டு காளை பூட்டிக்கிட்டு,கைய நானும் புடிச்சுகிட்டு,கூட்டி னானும் வந்தேனடி வண்டியிலே, மாட்டு வண்டியில..நீ வந்த நேரம்,எனக்கான பொன்நேரம்,உன் துணையாக, ந...