வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!
04 Feb 2020 Admin

துன்பமே இன்பத்தின் ஆரம்பம்,
இன்பமே துன்பத்தின் ஆரம்பம்,
இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை,
நம் – வாழ்நாளில்
இன்பம் இருக்கும் பொழுது,
துன்பம் வந்தால் தான் – அந்த
இன்பத்தின் அருமை தெரியும்;
துன்பப்பட்டு, இன்பத்தை அனுபவித்தால் தான்,
இன்பத்தின் சுகம் தெரியும் !!!
ஆசையே, பேராசைக்கு அறிகுறி – அந்த
ஆசையே துன்பத்திற்கும் அறிகுறி – அதற்கென்று
ஆசையே படக்கூடாது என்றில்லை – அளவோடு
ஆசைப்பட வேண்டும், அளவிற்கு மீறி ஆசைப்பட்டால் – அது
பேராசையாக உரு வெடுத்து விடும் – பின்னர்
அழிவை தேடி தரும் !!!
வாழ்க்கையில் ஒரு மனிதன் இன்பத்தையே
அனுபவிக்காமல் போகலாம் – அவன்
வாழ்க்கையில் துன்பப்பட்டு கொண்டிருப்பான்,
இன்பத்துக்காக காத்திருக்கமாட்டான் !!!
அவன் – தன் வாழ்க்கையில் இன்பம் கலந்த
துன்பத்தை கொண்டிருப்பான் – ஆனால் முழு
இன்பத்தை பெறமாட்டான் !!!
கடைசியில்,
இன்பம் அவனை தேடி வரும் பொழுது,
அவன் – பிண்டம் கொண்டு, பலர்
அன்னம் கொண்டனரோ !!!
See More Stories
28 Mar 2020
நண்பனே !!!
நண்பனே !தனக்கென வாழவில்லையே,பிறர்க்கென வாழும் உள்ளமே,நண்பனே !உன்னை போலவே,யாருமில்லையே..நிழலென நீயும் வருவாயே,விழ எழ கையொன்று தந்தாயே;விழிகளிலே நீர் வந...

05 Jul 2020
இரண்டும் ஒன்றாய் வாழ்க......
காதல் காமம் வேறுபாடு புரிய மறுக்கிறான், காம போர்வைக்குள், காதலை ஏனோ திணிக்காரன்இச்சை கொண்ட ஆசைக்கு விலைமகள் கேக்குதே, அதன் பெ...

05 Dec 2020
இறைவா
ஆயிரம் விழி கொண்ட இறைவா,உன்னொரு, விழியால் என்னை பாராயோ, உன் மொழியில் அழைத்தால் வருவாயோ,ஊமையாய் நின்றால் என் செய்வாயோஆதி...