ஓடி வா முருகா
By Admin - 04 Aug 2021 885 0

ஆறுமுகனே, அய்யனே
ஓடி வா செய்யோனே..
மஹாசேனா, மகேசன் சேனா,
கூட வா கந்தனே...
ஓடி வா முகனே..
தேடி தேடி,
அருள் பெற,
கண்டேன்
உன்னையே,
நீயே - குகனே,
என்றும் துணையே;
முருகனே வா வா,
என் பாலனே வா..
அழகும் நீயே,
வீரமும் நீயே,
திருநீறும் நீயே,
திருவருளும் நீயே,
என் முருகனே,
ஓடி வா என் பாலனே..
தேனின் சுவையும்,
பாலின் நிறமும்,
உலகின் பொருளும்
நீயே - என் வேலனே
வா என் குறை தீர்க்கவே.
ஈசன் மகனே,
மயில் வாகனனே,
ஆறு தலைகொண்ட,
அறுபடையப்பனே,
முருகனே ஓடி வா - என்
அப்பனே...
ஆதி அங்கம் கலந்து,
ஆதாரமாய் வந்தவனே,
மலைகளிலும் - நீரிலும்
கலந்திருப்பவனே - என்
சித்தனே - நீயே - முருகனே
ஓடி வா கந்தனே..
சிந்தனையில் உருவாகி,
நித்திரையில் உறவாடி,
உருவிலே கருவான
உறவே என் முருகனே..
அல்லல் தீர்க்கும்,
நல்லை செய்யும் - மகனே
என் அழகனே ஓடி வா,
என்னோடு சேரவா - முருகா..
வாழும் நொடிகள்,
கர்ம வினைகள் - தீர்க்க
கரம் தர ஓடி வா முருகா,
செய்த வினைகள் தீர,
அறியாத குறைகள் போக,
கருணை கொண்டு வா முருகா,
உன்னோடு சேரவா முருகா..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
21 Jan 2023
ஒரு முகம்
அன்பான உறவு,அழகான நட்பு,ஆழமான சொந்தம்,இறுகும் அருகிலோர், சிரித்து பழகும் சிலர்,பார்த்தும், காணாது பலர்,அத்தனை, முக பிம்பங்களையும் கிழித்தெறி...
05 Jul 2020
என் மகளுக்கு ஒரு கடிதம்......
மகளே என் மகளே,என் உயிரணுவில்,விதையாய் விந்திட்டஉயிரின் சிறுதுளியே..உன்னை நின் கருவறையில் – ஏற்க வழியில்லை,அதன் விட்டகுறையோ,நான் காணாத, சில உலகத்தை – ந...
11 Sep 2022
வெள்ளை
சில நொடிகள் இமைக்காமல்,கடிகாரத்தின் முட்கள் நகர்வதை பார்க்கும் பொழுது காலத்தில் வேகத்தை கண்டு பயம் தொற்றி கொண்டது.....