ஓடி வா முருகா
By Admin - 04 Aug 2021 928 0

ஆறுமுகனே, அய்யனே
ஓடி வா செய்யோனே..
மஹாசேனா, மகேசன் சேனா,
கூட வா கந்தனே...
ஓடி வா முகனே..
தேடி தேடி,
அருள் பெற,
கண்டேன்
உன்னையே,
நீயே - குகனே,
என்றும் துணையே;
முருகனே வா வா,
என் பாலனே வா..
அழகும் நீயே,
வீரமும் நீயே,
திருநீறும் நீயே,
திருவருளும் நீயே,
என் முருகனே,
ஓடி வா என் பாலனே..
தேனின் சுவையும்,
பாலின் நிறமும்,
உலகின் பொருளும்
நீயே - என் வேலனே
வா என் குறை தீர்க்கவே.
ஈசன் மகனே,
மயில் வாகனனே,
ஆறு தலைகொண்ட,
அறுபடையப்பனே,
முருகனே ஓடி வா - என்
அப்பனே...
ஆதி அங்கம் கலந்து,
ஆதாரமாய் வந்தவனே,
மலைகளிலும் - நீரிலும்
கலந்திருப்பவனே - என்
சித்தனே - நீயே - முருகனே
ஓடி வா கந்தனே..
சிந்தனையில் உருவாகி,
நித்திரையில் உறவாடி,
உருவிலே கருவான
உறவே என் முருகனே..
அல்லல் தீர்க்கும்,
நல்லை செய்யும் - மகனே
என் அழகனே ஓடி வா,
என்னோடு சேரவா - முருகா..
வாழும் நொடிகள்,
கர்ம வினைகள் - தீர்க்க
கரம் தர ஓடி வா முருகா,
செய்த வினைகள் தீர,
அறியாத குறைகள் போக,
கருணை கொண்டு வா முருகா,
உன்னோடு சேரவா முருகா..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
26 Apr 2021
அன்பு பழகு, அன்போடு பழகு...
கடவுளின் பெயர்களில் மதம் பிரிக்கப்பட்டதா,மதங்களின் அடிப்படையில் கடவுள் உருவாக்கப்பட்டதா;சாதிகளின் தலைவனாய் மதங்கள் உருவானதா,மதங்களின் அ...
04 Feb 2020
கடவுளை தேடி !!!...
விழியுண்டு, வழியுண்டு, காணாத கண் கொண்டு !!! நின்னை தேடா - எங்கும்,தேடல் தொடர்ந்திட...நித்தம் தோன்றும்; பெயரெல்லாம் உன்னை அழைத்திட,...
09 May 2024
அவன் ஒரு எழுத்தாளன்......
அவனுக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது... காரணம், அவன் ஒரு எழுத்தாளன்...அவன் எண்ணங்களுக்கு அவனே ராஜா, அதற்கு அவனே இறைவன்... அந்த இறைவனும் இறங்கி பூம...