ஓடி வா முருகா
By Admin - 04 Aug 2021 967 0

ஆறுமுகனே, அய்யனே
ஓடி வா செய்யோனே..
மஹாசேனா, மகேசன் சேனா,
கூட வா கந்தனே...
ஓடி வா முகனே..
தேடி தேடி,
அருள் பெற,
கண்டேன்
உன்னையே,
நீயே - குகனே,
என்றும் துணையே;
முருகனே வா வா,
என் பாலனே வா..
அழகும் நீயே,
வீரமும் நீயே,
திருநீறும் நீயே,
திருவருளும் நீயே,
என் முருகனே,
ஓடி வா என் பாலனே..
தேனின் சுவையும்,
பாலின் நிறமும்,
உலகின் பொருளும்
நீயே - என் வேலனே
வா என் குறை தீர்க்கவே.
ஈசன் மகனே,
மயில் வாகனனே,
ஆறு தலைகொண்ட,
அறுபடையப்பனே,
முருகனே ஓடி வா - என்
அப்பனே...
ஆதி அங்கம் கலந்து,
ஆதாரமாய் வந்தவனே,
மலைகளிலும் - நீரிலும்
கலந்திருப்பவனே - என்
சித்தனே - நீயே - முருகனே
ஓடி வா கந்தனே..
சிந்தனையில் உருவாகி,
நித்திரையில் உறவாடி,
உருவிலே கருவான
உறவே என் முருகனே..
அல்லல் தீர்க்கும்,
நல்லை செய்யும் - மகனே
என் அழகனே ஓடி வா,
என்னோடு சேரவா - முருகா..
வாழும் நொடிகள்,
கர்ம வினைகள் - தீர்க்க
கரம் தர ஓடி வா முருகா,
செய்த வினைகள் தீர,
அறியாத குறைகள் போக,
கருணை கொண்டு வா முருகா,
உன்னோடு சேரவா முருகா..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Dec 2024
வீழ்கிறேன்
நான் வீழ்கிறேன்,அதுவும் நன்மைக்கே.என்னை தொடாதீர்கள்,வீழ்வதே நன்றி சொல்லத்தான்.தொட்டவனை திட்டியவாறு,வேருக்கு முத்தமிட்டுநன்றி சொன்னது -உதிர்ந்த பூக்கள்...
10 Feb 2022
நந்துவும், நந்திதாவும்...
காலை 6 மணி..அலாரம் சத்தம்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அடித்து கொண்டு இருக்க..மணி 6 ஆச்சு, சீக்கிரம் எந்திரி நந்து.. ஸ்கூலுக்கு டைம்...
04 Jul 2020
தாத்தா...
ஒரு கோடி நூலகத்துக்கு சமம்,என் தாத்தாவின் சின்னஞ்சிறு உரையாடல்..விடுமுறை நாட்களில், வேடந்தாங்கல் போல மாறியது;தாத்தாவின் வீடு..இதன் அருமை தெர...