நீர் என்றுமே....
By Admin - 26 May 2025 164 0

தரை தொடும் முகில்
அழுவதில்லை,
போகும் திசையெல்லாம்
அமுதமாய் துளிர்கிறது...
மலையின் மடியிலே
தாய் போல பாயும் அருவி,
சிறு ஓடையின் ஓசையில்,
தாகம் தீர்க்கும் நதியில்,
அது பயணிக்கிறது —
வெறும் நீராக அல்ல,
உணர்வின் ஒலியாய்...
அனைத்தையும் கடந்தபின்,
சங்கமிக்கும் கடல் கூட
பேசிக்கொள்கிறது மேகத்துடன்:
“நீ வந்ததிலும், நான் வந்ததிலும்
தவிர்க்க முடியாத விதியே உள்ளது...”
நாம் தரும் நீர் என்றுமே அமுதம் தான்...
பசியோடு நின்றவனுக்கு,
சிறு மழைத் துளியும் — அமுதம்.
பக்தியோடு வைத்த நீரும்,
பரமனுக்கே பரிசமுதம்...
மனிதனுக்கு மட்டுமல்ல,
கண்ணில் கண்டு, காணாத
உயிருக்கும், அந்த வெய்யோனுக்கும்,
இயற்கைக்கும்,
நீர் தந்த உயிருக்கும், உடலுக்கும்,
நீர் இன்றி ஏது வேறு அமுதம்...
நாம்,
பிறக்கின்ற நீரும் அமுதம்,
கரைகின்ற நீரும் அமுதம்...
அன்போடு தரப்படும் எதுவும்,
அது நீராயினும் — அமுதம் தான்.
நீர் என்றுமே — அமுதம் தான்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Mar 2024
எண்ணம்
எண்ணங்கள் யதார்த்தங்கள் அல்ல,எண்ணங்களின் ஊடாக தான் யதார்த்தங்கள்..எண்ணங்கள் யென்று மறைகிறதோ,அங்கே நிம்மதி நிலைக்கிறது !!!- கல்யாணராமன் நாகரா...
06 Dec 2024
கண்ணாமூச்சி...
விளையாட யாருமில்லை,தனிமையின் தோழனாய்,மரத்தடியில்;ஏதோ பிம்பம்கண்ணாமூச்சி ஆடியது.சட்டென்று மேலே பார்த்தேன்...வெட்கத்தில்,வெண்மேகத்தில்,ஒளிந்தது சூரியன்!...
11 Jul 2020
கடனாளி
வீட்டில் பசியாற காத்திருக்கும் மக்கள்,துடிக்கும் இதயமாய் சொந்தங்கள்,நலம் கேட்கும் பக்கத்தினர்,அன்பின் உருவமாய் சில உறவுகள்,அணைத்து நிஜ முக பிம்பங...