மீண்டும் காதலிப்பேன்
By Admin - 27 Jan 2022 679 0

நீயென்னை பார்த்ததும்
என்னை மறந்தேன்
உன் புன்னகையில்
உயிர் தொலைத்தேன்
கடை விழி ஓரம்
என்னை பதிவிட
காற்றாய் மாறி
உன்னுள் வருவேன்
சிறு பிள்ளை
போலே - ஏனோ
நெஞ்சம் துள்ள
எங்கிருந்தாய்
இத்தனை நாளாய்
பனி துளிமேல்
சூரியன் போலே
உன்னை கண்டதும்
உருகி போனேன்
காதோரம்
முடி அசைவதில்
ஏனோ,
இதயத்தில்
கணம் கூட
கண்டேன்
உன் விரல்
பிடித்து - போகின்ற
தூரம், விண்வெளியும்
சிறு தூரம் என்பேன்
விரல் விடை
பெரும் நேரம்
சிறு விரல் நுழைந்திட
ஏங்கி நின்றேன்
கால் தொடும்
கடல் நுரையும்
உன் பாதம் பட்ட
தடயம் என்பேன்
மறையும் நிலவும்
உன் பார்வை
வீசிய
வெட்கம் என்பேன்
நீ தூங்கும்
போதும்
உலகமே
நின்றிட கண்டேன்
விடியும் பொழுதும்,
உன் மடியினில்
சாய்ந்திட வேண்டும்
என்றேன்
நீயில்லை யென்றால்,
பிறந்து வருவேன்
மீண்டும் காதலிப்பேன்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
காற்றாய் நானும் கரைந்தேனே...
என் கனவினில், கனவினில்வந்து வந்து செல்கிறாய்உன் நினைவுகள் - என்னைதேடி தேடி கொல்லுதேஉன் கரு விழிகள் - என்னை கண்டதும் இதயம் களவு போனதே, நீ என்...
17 Sep 2023
தற்பொழிவே
மானுயர் சிகை தானம் யென்றால்,குறுக்கானது ஏனோ தலை..நனவும் மாந்தர்க்குதற்பொழிவே......
04 Feb 2020
வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!...
துன்பமே இன்பத்தின் ஆரம்பம், இன்பமே துன்பத்தின் ஆரம்பம், இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை, நம் – வாழ்நாளில் இன்பம் இருக்கும் பொழுது, த...