அப்பா

By Admin - 18 Jan 2023 640 1

உன் உயிரணுவில், 
என்னை நகலெடுக்க..
நின் முதற் வங்கணம் 
நீயன்றோ..

கருவறையில்,
என்னை காணாது, 
நீ கொண்ட காதல்..
அதன் யான் காணாமல், 
யாதனம் கொண்டேனோ..

சிறு விதையாக, 
மண்ணில் வந்த என்னை...
முதலில் கண்டவுடன் - நீ 
என்ன நினைத்தாயோ...
இருளை தகர்க்கும் தகிழி 
போல் நீ நின்றாயோ !!!

நீ அள்ளியணைத்த 
கணங்கள், அத்தனையும் 
ஒரு பெட்டகமாய் என்னுள்
அகழ் எடுத்தாலும் - அது 
ஊற்றெடுக்கும் !!!

முதற் அன்னம், 
நானெடுக்க - உன் 
தோள் மீது என்னை 
சுமந்தாய் - அன்று, 
சொன்ன நிலா 
சோறு கதைகளும், 
ஒற்றை கன்னன் கள்ளத்தனமும்..
இன்றும் இனிமை !!!

ஏன்னெனில்...

அந்த நிலவை பிடிக்க 
முடியாது என்று தெரிந்தும்,
கதையாக கையில் வைத்து 
கொண்டு - என் நெஞ்சில் 
நம்பிக்கை என்னும் விதையை
விதைத்த முதல் தெய்வம் நீ !!!
அப்பா...

Add Your Comments

Say Something

 

Comments

from Archana at 2023-01-21 11:13:26

Excellent mama