கண்டேன் காருண்ணியன்
By Admin - 03 Dec 2022 747 0

கலைந்த நரை தலையும்
சிறு திருநீறும்,
கந்தல் வேஷ்டியும்,
தோளில் அங்கவஸ்திரமும்,
விழித்திரை மறைக்கும்
பெரிய அளவு பழுப்பு
மூக்குக்கண்ணாடியும்,
துணைக்கு துணை யில்லாது,
கையில் இறுகிய,
கை தடியும்,
தேய்ந்த பாதமும்,
காலத்தை வென்ற காலணியும்,
சுருங்கிய கைகளும்.
காய்ந்த உதடுகளும்,
மௌனமாய் வழிபாடும்,
ஒடிந்த திருவோடும்,
தடுக்கி விழ மறந்த
சில்லரைகளும்,
கண்டும் காணாத
கூட்டமும் இங்கே..
நன்றி சொல்லவில்லை,
குறை சொல்ல கண்டேன்,
குறை தீர்ந்ததும்,
நன்றி சொல்ல
மறந்த தையும் கண்டேன்..
நடமாடும் சிலை போல்,
சிலரை கண்டேன் - எனக்கு
சில்லரை போட மறக்க கண்டேன்..
அருளோன் எவன் என்று ?
அறிய கண்டேன்..
இறைவா...
தோள் தட்டி - அய்யா
என்றதும் - கண்டேன்
காருண்ணியன் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Jul 2021
My Dear பொம்மை - விளையாட்டின...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்மீனாவின் சத்தத்தை கேட்...
28 May 2022
வாழு, வாழுந்துவிடு......
நினைத்தால்நினைத்தால் நினைத்ததைநினைத்துதினம் - நீ உழைத்தால்நினைத்ததுநடக்கும்என்றால்தெய்வத்திற்குவேலை யில்லை...நினைப்பது, ஒன்று நடப்பதும்...
07 Jun 2021
பரம ரகசியம்...
யாருக்கும் தெரியாது,தெரியவும் கூடாது - யென்றுநினைக்கும் பொழுதில்,தெரிந்து விடும் - ஒரு அதிசயம்கருவில் - அணுக்கள் உருவம் முதல் - நம்மைஇன்னுயி...