கண்டேன் காருண்ணியன்

By Admin - 03 Dec 2022 701 0

கலைந்த நரை தலையும் 
சிறு திருநீறும்,
கந்தல் வேஷ்டியும்,
தோளில் அங்கவஸ்திரமும்,
விழித்திரை மறைக்கும்
பெரிய அளவு பழுப்பு 
மூக்குக்கண்ணாடியும்,
துணைக்கு துணை யில்லாது,
கையில் இறுகிய,
கை தடியும்,
தேய்ந்த பாதமும்,
காலத்தை வென்ற காலணியும்,
சுருங்கிய கைகளும்.
காய்ந்த உதடுகளும்,
மௌனமாய் வழிபாடும்,
ஒடிந்த திருவோடும்,
தடுக்கி விழ மறந்த 
சில்லரைகளும்,
கண்டும் காணாத
கூட்டமும் இங்கே..
நன்றி சொல்லவில்லை,
குறை சொல்ல கண்டேன்,
குறை தீர்ந்ததும்,
நன்றி சொல்ல 
மறந்த தையும் கண்டேன்..
நடமாடும் சிலை போல்,
சிலரை கண்டேன் - எனக்கு
சில்லரை போட மறக்க கண்டேன்..
அருளோன் எவன் என்று ?
அறிய கண்டேன்..
இறைவா...

தோள் தட்டி - அய்யா
என்றதும் - கண்டேன் 
காருண்ணியன் !!!

Add Your Comments

Say Something

 

Comments

No comments.