அம்மா

By Admin - 03 Mar 2024 448 0

அவ்வும் நீ,
அகாரமும் நீ,
அருவியின் ஓசை நீ,
காற்றின் ஒலியும் நீ,

வேதங்கள் ஓதும், நாதமும் நீ,
யாகங்கள் தரும் சாம்பலும் நீ,
அன்பில் தெரியும் உருவமும் நீ,
ரௌத்திர தனலும் நீ,
என்னுள்; கருணையும் நீ,

மலரின் அழகும் நீ,
உருகும் பனியும் நீ,
புல்லின் பனித்துளி நீ,
இளம் வெயிலும், நிழலும் நீ,
இரவின் குளிரும் நீ,

பறவையின் சிறகும் நீ,
புடவையின் வாசமும் நீ,
தோளும் நீ, தோழமையும் நீ,
என் - பிறப்பும் நீ, வாழ்வும் நீ,
உணர்வும் நீ, உயிரும் நீ,
ஏழ்மையும் நீ, உயர்வும் நீ,

என்னுள் பல - நீ யிருப்பதால்,
நான் நானாக அல்லை - நீயே
நானென்று; இன்று என் மகளாய்
நாயகியுள் வந்தாய் - அம்மா !!!

எழுத்தும், கற்பனையும்,
கல்யாணராமன் நாகராஜன்,

Add Your Comments

Say Something

 

Comments

No comments.