நான் யார்
By Admin - 10 Jul 2025 346 0

நான் யார் ?
என் வாழ்க்கையில்,
நான்,
ஒன்றும் எழுதப்படாத
வெறும் காகிதம்..
என்னை...
கடந்தவர்கள்,
கடக்கின்றவர்கள்,
கடக்கப்போகிறவர்கள்
காலம் கருதி,
நானே பெயர் கொடுத்துவிட்டேன்.
அவர்கள் தேர்ந்துடுத்தால் போதும்..
சிலருக்கு நல்லவன்,
சூழ்நிலையால் துரோகி,
கேட்டதும் கொடுத்தேன் கொடையாளி,
கொடுக்க முடியாமல் திகைத்தேன் சுயநலவாதி,
கொடுத்தவனுக்கு கடனாளி,
காலத்தால் ஏமாற்றுக்காரன்,
சில நேரங்கள் ஒன்றும் இல்லாதவன்,
பல நேரங்கள் ஒன்றும் அறியாதவன்,
சில சமயம் உண்மையை நேசிப்பவன்,
அதனால், பொய்க்கு சொந்தமானவன்..
கோபத்தை கையாளுபவன்,
பலருக்கு பொறுமை இழந்தவன்..
சில அழுத்தத்தால் தன்னிலை மறந்தவன்,
அதனால் வாழ்க்கையை கவனிக்க மறந்தவன்..
பல முகம் கொண்ட பன்முகக்காரன்,
நடிக்க தெரியாது என்று, நடிப்பவன்..
பொதுவாக,
எல்லோரும் ஒரு மனதாக
புரிந்துகொண்டதால்,
இன்னும் வாழ்கிறேன்
மனிதன் என்ற பெயரோடு...
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Jul 2021
My Dear பொம்மை
ஒரு அழகான வீடு... அதில் கார்த்திக் அப்பா, மீனா அம்மா, மூன்று வயது மகள் தேஜாஸ்ரீ..இங்கே சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை.. தேஜாவால் அந்த வீடே நிரம்பியிருந்தது...
27 Jun 2020
அந்த கடவுளை கண்டால் !!!...
மாயம் நிறைந்த உலகமடா,அதில் நீயும் நானும் காகிதமடா;காற்றுகள் வீசும் திசையின் எதிரே பயணிக்கும் சிறு&nb...
25 Jul 2021
ஒரு புகை வண்டிப் பெட்டியின் கத...
ஒரு நாள், அந்தி நேரம். மேகங்கள் கருகுமென்று சூழ, ஜில்லென்று காற்று, மரங்கள் அருகில் இல்லையென்றாலும், காற்று நாலா பக்கமும் அடிக்க, கோயிலுக்கு செல்ல செல...