நான் யார்
By Admin - 10 Jul 2025 345 0

நான் யார் ?
என் வாழ்க்கையில்,
நான்,
ஒன்றும் எழுதப்படாத
வெறும் காகிதம்..
என்னை...
கடந்தவர்கள்,
கடக்கின்றவர்கள்,
கடக்கப்போகிறவர்கள்
காலம் கருதி,
நானே பெயர் கொடுத்துவிட்டேன்.
அவர்கள் தேர்ந்துடுத்தால் போதும்..
சிலருக்கு நல்லவன்,
சூழ்நிலையால் துரோகி,
கேட்டதும் கொடுத்தேன் கொடையாளி,
கொடுக்க முடியாமல் திகைத்தேன் சுயநலவாதி,
கொடுத்தவனுக்கு கடனாளி,
காலத்தால் ஏமாற்றுக்காரன்,
சில நேரங்கள் ஒன்றும் இல்லாதவன்,
பல நேரங்கள் ஒன்றும் அறியாதவன்,
சில சமயம் உண்மையை நேசிப்பவன்,
அதனால், பொய்க்கு சொந்தமானவன்..
கோபத்தை கையாளுபவன்,
பலருக்கு பொறுமை இழந்தவன்..
சில அழுத்தத்தால் தன்னிலை மறந்தவன்,
அதனால் வாழ்க்கையை கவனிக்க மறந்தவன்..
பல முகம் கொண்ட பன்முகக்காரன்,
நடிக்க தெரியாது என்று, நடிப்பவன்..
பொதுவாக,
எல்லோரும் ஒரு மனதாக
புரிந்துகொண்டதால்,
இன்னும் வாழ்கிறேன்
மனிதன் என்ற பெயரோடு...
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
28 May 2022
வாழு, வாழுந்துவிடு......
நினைத்தால்நினைத்தால் நினைத்ததைநினைத்துதினம் - நீ உழைத்தால்நினைத்ததுநடக்கும்என்றால்தெய்வத்திற்குவேலை யில்லை...நினைப்பது, ஒன்று நடப்பதும்...
13 Jun 2022
இறைவா...
செவியிருந்தும் கேளாதோர்,கரங்கள் நீட்டி தராதோர்,வாய்மொழியில் அன்பில்லார்,உணர்ந்தும் அறியாததுபோல்,உருவம் இருந்தும்,கண்டதும் காணாததுபோல்,வாழ்வை நகர்த்தும...
07 Nov 2024
தொலைந்தது
சில நிமிடம் ,என் மகளின் தூளியில் நான்...தொலைந்தது குழந்தை தனம் மட்டும் இல்லை,அம்மாவின் புடவை வாசமும் தான்......