படிக்காத மேதை
By Admin - 20 Jul 2025 385 0

வயிறு பசித்தவனுக்கு,
புத்தியும் வளர்ந்திட,
உணவோடு சேர்த்து - வாய்ப்
பேசும் புத்தகத்தை தந்தவர்..
வாழ்க்கையை தொடங்க,
தொடக்கப் பள்ளியும்,
உயர்ந்து கொண்டே செல்ல,
உயர்க் கல்வியும்,
கல்வி இல்லாத வீடுகளுக்கு,
கல்வியை வாசலுக்கே,
கொண்டு சென்ற கல்வித் தந்தையும் அவர்..
ஆடைகளின் வேறுபாட்டை ஒழிக்க,
சீருடையில் புது சமத்துவத்தை தந்தவர்,
கல்வியின் தரத்தை தரமொடு இருந்திட,
ஒரே தரமாய் தந்தவர்...
ஒரு மரமாய் நின்று,
நூறு நிழல்களை தரும்
கன்றை உருவாக்கினார்..
வறண்ட பூமியில்,
கல்வித் நதியை ஓட வைத்த
கண் கண்ட தெய்வம் அவர்..
குடிசைகளின் தலைமுறை தழைத்திட,
பிள்ளை சொல்லி தகப்பன் கையெழுத்திட,
புத்தகத்தையும் குறிக்கோளையும்,
வித்திட்ட வித்தகர்...
படிக்கவில்லை, ஆனால்
ஆயிரம் பேரைப் படிக்க வைத்தவர்..
திட்டங்கள் ஆயிரம் வந்தாலும்,
அடிப்படை கல்வி கட்டமைப்பை
மாற்றிய படிக்காத மேதையவர்..
மண்ணுக்கு நீர்ப்போல்.
தமிழுக்கு "ழ" கரம் போல்,
கல்விக்கு என்றுமே,
கண் திறந்தவர் - எங்கள்
தன்னலமற்ற பெருந்தலைவர்
"காமராசர்' அவர் !!!
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
16 Jun 2022
பிச்சை
அம்மையும் அப்பனும்யார் கண்டார் - பிச்சை வாழ்விலே பிச்சை யின்றி யார் இருப்பார்...இருப்பவனோ உன்னிடம்நெருங்கி வருவான் இல்லாதவன்,வெளிய...
21 Jan 2023
ஒரு முகம்
அன்பான உறவு,அழகான நட்பு,ஆழமான சொந்தம்,இறுகும் அருகிலோர், சிரித்து பழகும் சிலர்,பார்த்தும், காணாது பலர்,அத்தனை, முக பிம்பங்களையும் கிழித்தெறி...
09 Mar 2024
எண்ணம்
எண்ணங்கள் யதார்த்தங்கள் அல்ல,எண்ணங்களின் ஊடாக தான் யதார்த்தங்கள்..எண்ணங்கள் யென்று மறைகிறதோ,அங்கே நிம்மதி நிலைக்கிறது !!!- கல்யாணராமன் நாகரா...