படிக்காத மேதை
By Admin - 20 Jul 2025 347 0

வயிறு பசித்தவனுக்கு,
புத்தியும் வளர்ந்திட,
உணவோடு சேர்த்து - வாய்ப்
பேசும் புத்தகத்தை தந்தவர்..
வாழ்க்கையை தொடங்க,
தொடக்கப் பள்ளியும்,
உயர்ந்து கொண்டே செல்ல,
உயர்க் கல்வியும்,
கல்வி இல்லாத வீடுகளுக்கு,
கல்வியை வாசலுக்கே,
கொண்டு சென்ற கல்வித் தந்தையும் அவர்..
ஆடைகளின் வேறுபாட்டை ஒழிக்க,
சீருடையில் புது சமத்துவத்தை தந்தவர்,
கல்வியின் தரத்தை தரமொடு இருந்திட,
ஒரே தரமாய் தந்தவர்...
ஒரு மரமாய் நின்று,
நூறு நிழல்களை தரும்
கன்றை உருவாக்கினார்..
வறண்ட பூமியில்,
கல்வித் நதியை ஓட வைத்த
கண் கண்ட தெய்வம் அவர்..
குடிசைகளின் தலைமுறை தழைத்திட,
பிள்ளை சொல்லி தகப்பன் கையெழுத்திட,
புத்தகத்தையும் குறிக்கோளையும்,
வித்திட்ட வித்தகர்...
படிக்கவில்லை, ஆனால்
ஆயிரம் பேரைப் படிக்க வைத்தவர்..
திட்டங்கள் ஆயிரம் வந்தாலும்,
அடிப்படை கல்வி கட்டமைப்பை
மாற்றிய படிக்காத மேதையவர்..
மண்ணுக்கு நீர்ப்போல்.
தமிழுக்கு "ழ" கரம் போல்,
கல்விக்கு என்றுமே,
கண் திறந்தவர் - எங்கள்
தன்னலமற்ற பெருந்தலைவர்
"காமராசர்' அவர் !!!
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
30 May 2021
மரண அகராதி
மரணம் யென்பது,அகவைக்கு ஒய்வு,ஆசைக்கு ஒய்வு,இச்சைக்கு ஒய்வு,ஈகைக்கு ஒய்வு,உடலுக்கு ஒய்வு,ஊருக்கு ஒய்வு,எழுத்துக்கு ஒய்வு,ஏற்பதுற்கு ஒய்வு,ஐயத்திற...
25 Aug 2023
கனக சபாபதி
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்தநாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்வாழ்க ...
17 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 1 - 3கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 4கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 5இறுதி பாடம்....அப்பா, கடை...