படிக்காத மேதை
By Admin - 20 Jul 2025 434 0

வயிறு பசித்தவனுக்கு,
புத்தியும் வளர்ந்திட,
உணவோடு சேர்த்து - வாய்ப்
பேசும் புத்தகத்தை தந்தவர்..
வாழ்க்கையை தொடங்க,
தொடக்கப் பள்ளியும்,
உயர்ந்து கொண்டே செல்ல,
உயர்க் கல்வியும்,
கல்வி இல்லாத வீடுகளுக்கு,
கல்வியை வாசலுக்கே,
கொண்டு சென்ற கல்வித் தந்தையும் அவர்..
ஆடைகளின் வேறுபாட்டை ஒழிக்க,
சீருடையில் புது சமத்துவத்தை தந்தவர்,
கல்வியின் தரத்தை தரமொடு இருந்திட,
ஒரே தரமாய் தந்தவர்...
ஒரு மரமாய் நின்று,
நூறு நிழல்களை தரும்
கன்றை உருவாக்கினார்..
வறண்ட பூமியில்,
கல்வித் நதியை ஓட வைத்த
கண் கண்ட தெய்வம் அவர்..
குடிசைகளின் தலைமுறை தழைத்திட,
பிள்ளை சொல்லி தகப்பன் கையெழுத்திட,
புத்தகத்தையும் குறிக்கோளையும்,
வித்திட்ட வித்தகர்...
படிக்கவில்லை, ஆனால்
ஆயிரம் பேரைப் படிக்க வைத்தவர்..
திட்டங்கள் ஆயிரம் வந்தாலும்,
அடிப்படை கல்வி கட்டமைப்பை
மாற்றிய படிக்காத மேதையவர்..
மண்ணுக்கு நீர்ப்போல்.
தமிழுக்கு "ழ" கரம் போல்,
கல்விக்கு என்றுமே,
கண் திறந்தவர் - எங்கள்
தன்னலமற்ற பெருந்தலைவர்
"காமராசர்' அவர் !!!
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Oct 2022
பிள்ளையாரும் சக்கரை பொங்கலும்....
பிள்ளையாரும் சக்கரை பொங்கலும்..காலை 6 மணி....அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள்... அங்கே குடி இருக்கும், சில பெண்கள் மட்டும் இருக்கும் whatsapp குர...
10 Feb 2022
நந்துவும், நந்திதாவும்...
காலை 6 மணி..அலாரம் சத்தம்..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அடித்து கொண்டு இருக்க..மணி 6 ஆச்சு, சீக்கிரம் எந்திரி நந்து.. ஸ்கூலுக்கு டைம்...
12 Jan 2025
ஒரு ஞானம்
உறுத்தல் என்பது வலியின் முடிவல்ல,வலிதாண்டி வரும் வழியின் சிந்தனை...புல்மேல் பிறந்த பனித்துளியின் முடிவு,புல்லுக்கும், காற்றுக்கும் உறுத்தல் அல்ல...கதி...