ஒரு ஞானம்
By Admin - 12 Jan 2025 403 0

உறுத்தல் என்பது வலியின் முடிவல்ல,
வலிதாண்டி வரும் வழியின் சிந்தனை...
புல்மேல் பிறந்த பனித்துளியின் முடிவு,
புல்லுக்கும், காற்றுக்கும் உறுத்தல் அல்ல...
கதிரவன் தரும் ஒளி அனுபவம்.
உறுத்தலில் மிஞ்சுவது அனுபவம்,
அது காலம் கடந்தாலும் அந்த உரையாடல்
தீராமல் காதுக்குள் ஒலிக்கும்...
சிறுவர்கள் விளையாடுவதை காண,
மேகத்தில் ஒளிந்துகொண்ட சூரியனுக்கும் உண்டு ஞானம்.
சொல்லாத காதலும், சொல்லிய காதலும்
சேராமல், எங்கோ ஒன்று சேர்ந்தவர்களுக்கும்
அருகே அமரும் அனுபவத்தின் பிறப்பாய் ஒரு உறவு...
பேசவில்லை, தலைசாயவில்லை, கை கோர்க்கவில்லை,
"வாழ்ந்து விட்டோம்" என்று பிரிந்த விழிகள் சொன்ன
வார்த்தையில் ஒரு ஞானம்...
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்,வறண்டால் போகிறார்கள்,
இறந்தால் அழுகிறார்கள், மறுநாள் மறக்கிறார்கள்...
ஆயிரம் பேசினாலும், வலியால் வரும்
வழியே என்றுமே ஒரு அனுபவம்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
ஒற்றை பார்வை தீண்டலில்...
ஒற்றை பார்வை தீண்டலில்,என்னை என்ன செய்தாயோ,சின்னஞ்சிறு குறுநகையில்,புதுமொழி ஒன்றை தந்தாயோ..அன்பே, எனதுயிரே,நானாக நானில்லையே,உன்னை கண்டதும்,தாய்மொழி து...
18 Mar 2024
வெள்ளையும், கருப்பும்...
எப்பொழுது, வெள்ளை அடித்தாலும்,தன் முகத்தில் - மீண்டும் கரி பூசிக்கொள்கிறதுவீட்டின் சமையல் அறை..வெள்ளைக்கும், கருப்புக்கும் - தீராதகாதல்...
27 Jun 2020
கண்கள் நீயே......
கண்கள் நீயே,காதலும் நீயே,என் விழிகளில் வழியும் ஜீவனும் நீயே...உயிரும் நீயே,உறவும் நீயே,என் உதிரத்தில் கலந்தஉருவமும் நீயே...அடி..வாழ்கின்ற நொடியேஉ...