நன்றி பகலவா !!!
By Admin - 19 Jan 2025 562 0

தைத் திங்கள் தழுவிய
தமிழ் மகளின் தாலாட்டலில்
ஈரைந்து மாதங்கள் சுமந்த,
மேகக் கூட்டத்தில் ஓரமாய்
ஒளிந்துக் கொண்டே
வெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!
சில மதங்கள், பலப் பிரிவினைகள்,
ஓராயிரம் கண்டாலும் - வாழும் பூமியே
சூரியக் குடும்பம் தானே..?
ஆதியரே,
நிற்காமல் உன்னை சுழல்கிறோம் இன்றும்
நிலையானது, உன் ஒளியழகு,
தீயென, தேகத்தை சாய்த்தாலும்,
தலைவனே, உனது கருணை விழியால்,
நிலத்தில், மழையும் பெய்யும்...
மண்ணுக்கும், உனக்கும் உள்ள உரையாடல்,
என்றுமே இரகசியம்..
இயற்கையின் தகப்பன் அல்லவா நீ...
உன், ஒளியால் செழிக்கும் இந்த மண்ணில்,
புதுமைகள் மலரும், பசுமைகள் பரவும்,
அறுவடை இந்த,
நிலத்திற்கும், எங்கள் எண்ணத்திற்கும்..
நாளைய வாழ்வை, நம்பிக்கையுடன்
விதைக்கிறோம் நாங்கள் இன்று!
உன் ஒளியில்லாமல் வாழ்நிலம் வாழ முடியாது,
விளைச்சல் இல்லாமல் மனிதன் வாழ முடியாது!
வருடங்கள் கோடி கடந்துப்போனாலும்,
உனக்கு நன்றி சொல்லவே
மீண்டும் மீண்டும் பிறப்போம்,
எங்கள் ஆதவனே...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
26 May 2025
நீர் என்றுமே.......
தரை தொடும் முகில்அழுவதில்லை,போகும் திசையெல்லாம்அமுதமாய் துளிர்கிறது...மலையின் மடியிலேதாய் போல பாயும் அருவி,சிறு ஓடையின் ஓசையில்,தாகம் தீர்க்கும் நதியி...
16 Oct 2020
நண்பா நீ போராடு !!!...
நண்பா நீ போராடு !!!விழுந்தால் அழாதே,அழுதால் துடிக்காதே,நிழலும்; துணையின்றி போகும்..ஜனனமும் புதியது,மரணமும் பழையது,இடைவேளையில் - சிறு பயணம்;அது முடியும...
05 Dec 2024
வீழ்கிறேன்
நான் வீழ்கிறேன்,அதுவும் நன்மைக்கே.என்னை தொடாதீர்கள்,வீழ்வதே நன்றி சொல்லத்தான்.தொட்டவனை திட்டியவாறு,வேருக்கு முத்தமிட்டுநன்றி சொன்னது -உதிர்ந்த பூக்கள்...