நன்றி பகலவா !!!
By Admin - 19 Jan 2025 483 0

தைத் திங்கள் தழுவிய
தமிழ் மகளின் தாலாட்டலில்
ஈரைந்து மாதங்கள் சுமந்த,
மேகக் கூட்டத்தில் ஓரமாய்
ஒளிந்துக் கொண்டே
வெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!
சில மதங்கள், பலப் பிரிவினைகள்,
ஓராயிரம் கண்டாலும் - வாழும் பூமியே
சூரியக் குடும்பம் தானே..?
ஆதியரே,
நிற்காமல் உன்னை சுழல்கிறோம் இன்றும்
நிலையானது, உன் ஒளியழகு,
தீயென, தேகத்தை சாய்த்தாலும்,
தலைவனே, உனது கருணை விழியால்,
நிலத்தில், மழையும் பெய்யும்...
மண்ணுக்கும், உனக்கும் உள்ள உரையாடல்,
என்றுமே இரகசியம்..
இயற்கையின் தகப்பன் அல்லவா நீ...
உன், ஒளியால் செழிக்கும் இந்த மண்ணில்,
புதுமைகள் மலரும், பசுமைகள் பரவும்,
அறுவடை இந்த,
நிலத்திற்கும், எங்கள் எண்ணத்திற்கும்..
நாளைய வாழ்வை, நம்பிக்கையுடன்
விதைக்கிறோம் நாங்கள் இன்று!
உன் ஒளியில்லாமல் வாழ்நிலம் வாழ முடியாது,
விளைச்சல் இல்லாமல் மனிதன் வாழ முடியாது!
வருடங்கள் கோடி கடந்துப்போனாலும்,
உனக்கு நன்றி சொல்லவே
மீண்டும் மீண்டும் பிறப்போம்,
எங்கள் ஆதவனே...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
16 Mar 2025
உன் காலடி சுழலில்...
மெட்டி,உன் காலடி சுழலில், ஒலிக்கும் ஓசை..அழகானக் காதலும், ஊடலும் கதைப் பேசும் இடம்..நீயும், நானும்ஒன்றாய் சுழல்கின்ற பந்தம்மெட்டியின் சாட்சியாய் தொடங்...
20 Sep 2020
அம்மா...
அம்மா நீ யிருந்தபொழுது, எனக்கு இழப்பு எதுவுமில்லை, நீயில்லை யென்றபொழுது, இழப்பதற்கு ஒன்றுமில்லை.....
04 Feb 2020
வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!...
துன்பமே இன்பத்தின் ஆரம்பம், இன்பமே துன்பத்தின் ஆரம்பம், இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை, நம் – வாழ்நாளில் இன்பம் இருக்கும் பொழுது, த...