நன்றி பகலவா !!!
By Admin - 19 Jan 2025 520 0

தைத் திங்கள் தழுவிய
தமிழ் மகளின் தாலாட்டலில்
ஈரைந்து மாதங்கள் சுமந்த,
மேகக் கூட்டத்தில் ஓரமாய்
ஒளிந்துக் கொண்டே
வெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!
சில மதங்கள், பலப் பிரிவினைகள்,
ஓராயிரம் கண்டாலும் - வாழும் பூமியே
சூரியக் குடும்பம் தானே..?
ஆதியரே,
நிற்காமல் உன்னை சுழல்கிறோம் இன்றும்
நிலையானது, உன் ஒளியழகு,
தீயென, தேகத்தை சாய்த்தாலும்,
தலைவனே, உனது கருணை விழியால்,
நிலத்தில், மழையும் பெய்யும்...
மண்ணுக்கும், உனக்கும் உள்ள உரையாடல்,
என்றுமே இரகசியம்..
இயற்கையின் தகப்பன் அல்லவா நீ...
உன், ஒளியால் செழிக்கும் இந்த மண்ணில்,
புதுமைகள் மலரும், பசுமைகள் பரவும்,
அறுவடை இந்த,
நிலத்திற்கும், எங்கள் எண்ணத்திற்கும்..
நாளைய வாழ்வை, நம்பிக்கையுடன்
விதைக்கிறோம் நாங்கள் இன்று!
உன் ஒளியில்லாமல் வாழ்நிலம் வாழ முடியாது,
விளைச்சல் இல்லாமல் மனிதன் வாழ முடியாது!
வருடங்கள் கோடி கடந்துப்போனாலும்,
உனக்கு நன்றி சொல்லவே
மீண்டும் மீண்டும் பிறப்போம்,
எங்கள் ஆதவனே...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
29 Aug 2025
குறுஞ்செய்தி...
சாலையோரத்தில்,ஏன் அவர்களுக்கு வீடு இல்லை என்று என்னும் பொழுது,வீட்டை காலி செய்யுங்கள் என்ற அழகிய குறுஞ்செய்தி......
28 Jul 2021
அப்பாவின் பக்கங்கள் !!!...
அப்பாவின் பக்கங்கள் !!!நடுத்தர குடும்பம், அப்பா சீரியஸாக டிவி பார்த்து கொண்டே, ச்சே, நம்பாளுங்க சொதப்புறாங்க, என்னத்த சொல்லறது... TV பாக்கவே கடுப்பா இ...
11 Jul 2020
காற்றாய் நானும் கரைந்தேனே...
என் கனவினில், கனவினில்வந்து வந்து செல்கிறாய்உன் நினைவுகள் - என்னைதேடி தேடி கொல்லுதேஉன் கரு விழிகள் - என்னை கண்டதும் இதயம் களவு போனதே, நீ என்...