நண்பா நீ போராடு !!!
By Admin - 16 Oct 2020 1097 0

நண்பா நீ போராடு !!!
விழுந்தால் அழாதே,
அழுதால் துடிக்காதே,
நிழலும்; துணையின்றி போகும்..
ஜனனமும் புதியது,
மரணமும் பழையது,
இடைவேளையில் - சிறு பயணம்;
அது முடியும் வரை போராடு..
நேரங்கள், காலங்கள்
கூடி வருமா - உன் மதியை
கொண்டு விதியை
உடைத்திட போராடு
தினம் புது நாடகம்,
பல அறியா வேஷம்,
சூழ்நிலை மாறும்,
அது தரும் புது பரிமாணம்;
நொடிநேர துயலாய்,
உறங்கிவிட்டாலும்,
கனவுகளை நீ காத்திடு,
விடியும் நேரத்தில்,
அது தொடர்ந்தால்,
விடியலை நீ கண்டாய்,
அது வரை போராடு...
வானம் இருக்குது,
பூமியும் இருக்குது,
எழுந்து வா தோழா..
யாரென்ன;
வந்தார்கள்,
சொன்னார்கள் ,
உன்னையன்றி யாரும்;
உன்னையறிவதில்லை,
தேடல்கள் தீராமல்,
ஓய்வும் இல்லாது..
சிறகாய் பறந்திடு,
அந்த வானம்,
வசப்படும் தோழா !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
13 Mar 2024
மோகம்
கடைசியாய்,முகம் பார்த்துக்கொள் என்ற - ஒற்றை வார்த்தைகூட கேட்க முடியாத அவலம் தான் வெளிநாட்டு வேலையின் மோகம்.....
04 Feb 2020
வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!...
துன்பமே இன்பத்தின் ஆரம்பம், இன்பமே துன்பத்தின் ஆரம்பம், இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை, நம் – வாழ்நாளில் இன்பம் இருக்கும் பொழுது, த...
19 Mar 2024
எறும்பு
ஒரு பருக்கை சாதத்தின்கனம் - அதைதூக்கிச் செல்லும்எறும்புக்கு மட்டும் தான்தெரியும் !!!- கல்யாணராமன் நாகராஜன் ...