கண் திறந்தால்
By Admin - 11 Jul 2020 908 0

இருண்டு கிடக்கும் வாழ்வில்
கண்களை மூடிக்கொண்டு,
சுற்றும் பதறுகளே...
சற்றே - கண் திறந்தால்
அதன் ஒளி தரும்
பல வண்ணம்
தனிமை யென்பது,
ஒடுக்கப்பட்ட சிந்தனையல்ல,
அது - வாழ்வின்
கலைக்கூடம்
நீ
எழுவதும்,
அழுவதும்,
ஒன்றாய் படைக்கப்படும்,
காவியம்
உன்னை - நீ அறிவது
கூட்டத்தில் அல்ல,
தனிமையில்
துன்பத்தை கண்டு
சோர்வடையவில்லை - அது
சோர்வடையும்வரை
ஓயப்போவதில்லை
உன்
போராட்டம்..
புதிதல்ல,
தொடக்கமல்ல,
முடிவுமல்ல..
ஒன்றாய் பின்னிப்படர்ந்த,
உறவுகள்
உதிரத்தில் கலந்த,
பல வண்ணங்கள்,
வாழ்வியல்
இதன்
வெற்றி,
கதை,
பாதை,
அனைத்தும் காவியமாய்,
அழகான காட்சியாய்,
அதை உணராமல்,
ஏனோ நிற்க நிர்கதியாய்,
காரணம் - அனைத்தும்
பிண்டம் முன்பே
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
13 Feb 2022
இதற்கு பெயர்தான்......
கொஞ்சம் கொஞ்சலும்,கொஞ்சிடும் காதலும்.சிணுங்கும் இசையும்.கண்டேனடி,உன்னிடத்தில்...நாணம் மறக்கிறேன்,நானும் மறக்கிறேன்,விழிகளில் இருளோ,உலகம் சுருங்குதே,உன...
03 Dec 2022
கண்டேன் காருண்ணியன்...
கலைந்த நரை தலையும் சிறு திருநீறும்,கந்தல் வேஷ்டியும்,தோளில் அங்கவஸ்திரமும்,விழித்திரை மறைக்கும்பெரிய அளவு பழுப்பு மூக்குக்கண்ணாடியும்,துணைக்...
09 Jun 2021
மீனாவும் Middleclass அப்பாவும்...
கதைக்களம் - ஆரம்பம் - 1ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்ல...