ஒற்றை பார்வை தீண்டலில்
By Admin - 11 Jul 2020 862 0

ஒற்றை பார்வை தீண்டலில்,
என்னை என்ன செய்தாயோ,
சின்னஞ்சிறு குறுநகையில்,
புதுமொழி ஒன்றை தந்தாயோ..
அன்பே, எனதுயிரே,
நானாக நானில்லையே,
உன்னை கண்டதும்,
தாய்மொழி துணையில்லையே...
என்னை என்ன செய்தாயோ,
சின்னஞ்சிறு குறுநகையில்,
புதுமொழி ஒன்றை தந்தாயோ..
அன்பே, எனதுயிரே,
நானாக நானில்லையே,
உன்னை கண்டதும்,
தாய்மொழி துணையில்லையே...
உன்னை நானும் எவ்வழி கண்டேன்,
உயிரில் நீயும் கலந்தாய் பெண்ணே,
அழகாய் உந்தன் மொழிகளை கேட்க,
ஆயுள் நீள வரம் கேட்டேனே..
வாழும் சொர்க்கம் எதுவென்று,
உன்னருகில் நானும் கண்டேனடி,
அடியே, மழையே,
என்னுளே துளியாய் நீயும்,
சென்றாயடி..
அழகே, மலரே,
உயிரில் நீயும் கலந்தாய் பெண்ணே,
அழகாய் உந்தன் மொழிகளை கேட்க,
ஆயுள் நீள வரம் கேட்டேனே..
வாழும் சொர்க்கம் எதுவென்று,
உன்னருகில் நானும் கண்டேனடி,
அடியே, மழையே,
என்னுளே துளியாய் நீயும்,
சென்றாயடி..
அழகே, மலரே,
சிறு வாசம் நீயும்,
தந்தாயடி...
தந்தாயடி...
உந்தன் தேடும் விழிகள் - என்னை
கண்டால் அன்பே போதும்
எந்தன் நெஞ்சிலுள்ளே - உனது
கனவுகள் எல்லாம் உயிர் பெறும்
உன் விழிகள் பேசும்,
கதைகள் எல்லாம்,
நானறிவேன்.
நீ சொல்லாமல் சொன்ன,
வார்த்தையும் - இங்கே
உயிர்ந்தெழும்..
கண்டால் அன்பே போதும்
எந்தன் நெஞ்சிலுள்ளே - உனது
கனவுகள் எல்லாம் உயிர் பெறும்
உன் விழிகள் பேசும்,
கதைகள் எல்லாம்,
நானறிவேன்.
நீ சொல்லாமல் சொன்ன,
வார்த்தையும் - இங்கே
உயிர்ந்தெழும்..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Jul 2020
என் மகளுக்கு ஒரு கடிதம்......
மகளே என் மகளே,என் உயிரணுவில்,விதையாய் விந்திட்டஉயிரின் சிறுதுளியே..உன்னை நின் கருவறையில் – ஏற்க வழியில்லை,அதன் விட்டகுறையோ,நான் காணாத, சில உலகத்தை – ந...
21 May 2021
இறுதி நிமிடங்கள்...
வாழ்க்கையின் சுவாரஸ்யமே,தினமும்;கடந்துப் போகும் சாலை,பார்க்கும் மனிதர்,உலாவும் வீட்டின் அறைகள்,அணைக்கும் நெஞ்சங்கள்,அன்பு பொழியும் விழிகள்,சிரிக்கும் ...
28 Aug 2025
என்னை அறியாமல்...
என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...காரண...