சில உணர்வுகள்
By Admin - 12 Jan 2025 399 0

அந்திமாலையின் அடைமழை நிறைந்த,
ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,
வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,
புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளி
அலைந்து அடங்கும் காற்றின் தாலாட்டலில்,
நினைவுகளின் நிழல் ஆடிய புதர்கூடத்தில்,
சத்தமின்றி பூக்கும் பூவின் ஓசை,
வண்டுகளின் ரீங்காரம், பறவையின் இசையும்...
தன் வீட்டின் முற்றத்தில், விளையாடும் தவளை,
சிறகில் பிறந்த இறகைப்போலே,
மண் எங்கும் மண் வாசனை
வாடியதெல்லாம் மீண்டும் துளிர்ந்தது..
நெடிய வயல்களும், செடிகளும், மரங்களும்,
பறவையும், ஓடும் ஆறும் - காற்றின் இராகத்திற்கு
தலை அசைத்து நன்றி சொன்னது பூமிக்கு,
இயற்கையின் அன்புக்கு மொழி தேவை இல்லை...
விழுந்தால் அம்மா சொல்வதும்,
வாடினால் அப்பா சொல்வதும்,
துவண்டால் தோள் சாய்வதும் - மனிதனுள்
விதைக்கப்பட்ட இயற்கையின் துகள் அது..
உணவு, உடை, இருப்பிடம், காற்று, பேசிக் கொள்ள
ஆயிரம் வார்த்தைகள், ஆண்டுகள் கடந்தாலும்
செயற்கை நுண்ணறிவால் என்றும் மாறாதது
நாம் இயற்கையோடு கொண்ட சில உணர்வுகள்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 May 2021
அப்படிதான் பாட்டி...
பள்ளிகூடத்தின் வாசம் யில்லை,மருத்துவமனைக்கு செல்ல வில்லை,மருந்தகம் பற்றி அறிந்த தில்லை,உணவே,மருந்தாய் கொண்டாய்,நோய் தடம் தெரிய வில...
10 Jul 2025
நான் யார் ?
நான் யார் ?என் வாழ்க்கையில்,நான், ஒன்றும் எழுதப்படாத வெறும் காகிதம்..என்னை...கடந்தவர்கள், கடக்கின்றவர்கள், கடக்கப்போகிறவர்கள்காலம்...
24 Oct 2020
உன்னை பார்த்தால் போதும்...
உன்னை,பார்த்தால் போதும்,என் வாழ்வின் துன்பங்கள் தீரும்;அந்த வானத்து நிலவும்,சின்னதாய் தோன்றும்உன் மழலையில் - என்னை மறந்திடும் நேரம்..உன்னை ம...