சில உணர்வுகள்
By Admin - 12 Jan 2025 437 0

அந்திமாலையின் அடைமழை நிறைந்த,
ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,
வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,
புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளி
அலைந்து அடங்கும் காற்றின் தாலாட்டலில்,
நினைவுகளின் நிழல் ஆடிய புதர்கூடத்தில்,
சத்தமின்றி பூக்கும் பூவின் ஓசை,
வண்டுகளின் ரீங்காரம், பறவையின் இசையும்...
தன் வீட்டின் முற்றத்தில், விளையாடும் தவளை,
சிறகில் பிறந்த இறகைப்போலே,
மண் எங்கும் மண் வாசனை
வாடியதெல்லாம் மீண்டும் துளிர்ந்தது..
நெடிய வயல்களும், செடிகளும், மரங்களும்,
பறவையும், ஓடும் ஆறும் - காற்றின் இராகத்திற்கு
தலை அசைத்து நன்றி சொன்னது பூமிக்கு,
இயற்கையின் அன்புக்கு மொழி தேவை இல்லை...
விழுந்தால் அம்மா சொல்வதும்,
வாடினால் அப்பா சொல்வதும்,
துவண்டால் தோள் சாய்வதும் - மனிதனுள்
விதைக்கப்பட்ட இயற்கையின் துகள் அது..
உணவு, உடை, இருப்பிடம், காற்று, பேசிக் கொள்ள
ஆயிரம் வார்த்தைகள், ஆண்டுகள் கடந்தாலும்
செயற்கை நுண்ணறிவால் என்றும் மாறாதது
நாம் இயற்கையோடு கொண்ட சில உணர்வுகள்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Jul 2021
ஒரு குப்பை, ஒரு பொக்கிஷம்...
இரவு பத்து மணி..ஏங்க, நாளைக்கு காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு சீக்கிரமா கல்யாணத்துக்கு கிளம்பனும்.. தூங்கிறக்கூடாது.. எங்க தூங்கறது கனகு, வண்டி ச...
16 May 2020
காதல் கொண்டேனே........
அழகான மாலை நேரம்,அலைபாயும் என் மனம்,நின்னை கண்டதும் - காதல்கொண்டேனே; நானும்காதல் கொண்டேனே..விழியாலே பேசும்,நாடகங்கள் நானறிவேன்,கனவிலும் தோழியே,காற்றை ...
21 May 2021
இறுதி நிமிடங்கள்...
வாழ்க்கையின் சுவாரஸ்யமே,தினமும்;கடந்துப் போகும் சாலை,பார்க்கும் மனிதர்,உலாவும் வீட்டின் அறைகள்,அணைக்கும் நெஞ்சங்கள்,அன்பு பொழியும் விழிகள்,சிரிக்கும் ...