உனக்காகவே
By Admin - 16 Feb 2022 843 0

விரலோடு விரல் சேர்த்து
போகாமல் போவேனோ..
தோள்மேலே தலைசாய்த்து
சாயாமல் சாய்வேனோ..
உன் மடிமீது நானும்,
உறங்கும் நேரம்,
உயிர் போனாலும்,
மீண்டும் பிறப்பேனோ..
நிழலாக உன் பின்னால்,
நாள்தோறும் தொடர்வேனோ,
நீ என்னை காணாமல் போனால்,
மண் மீது சாய்வேனோ..
மண்ணோடு மண்ணாகி
போனாலும் கண்ணே,
உன் கண்ணோடு கண்ணாகி
உறவாட வேண்டும் பெண்ணே..
சத்தமின்றி, நெஞ்சுக்குள்ளே,
யுத்தம் செய்தாலே - நித்தம் தோறும்,
அவள் முகம் தேடி நானும் போவேனே...
மௌனமாய் - உன் பார்வை
சின்னதாய் சிந்திடும்
புன்னகை போதுமே,
நான் வாழ்கின்ற
நொடியும் தருவேன்
உனக்காகவே....
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Mar 2024
எண்ணம்
எண்ணங்கள் யதார்த்தங்கள் அல்ல,எண்ணங்களின் ஊடாக தான் யதார்த்தங்கள்..எண்ணங்கள் யென்று மறைகிறதோ,அங்கே நிம்மதி நிலைக்கிறது !!!- கல்யாணராமன் நாகரா...
30 Jul 2021
முகம்
தெரிவது ஒருமுகம்,ஒளிந்திருப்பது பல முகம்,எம்முகம் எவ்வரும்,அம்முகம் அவ்வரும்,நேரம் உருமாறும்;எது - நிஜமுகம்,யாரும் அறியோம்;உள்ளம் தெளிவினில்,முகமும் ம...
03 Dec 2022
கண்டேன் காருண்ணியன்...
கலைந்த நரை தலையும் சிறு திருநீறும்,கந்தல் வேஷ்டியும்,தோளில் அங்கவஸ்திரமும்,விழித்திரை மறைக்கும்பெரிய அளவு பழுப்பு மூக்குக்கண்ணாடியும்,துணைக்...