உனக்காகவே
By Admin - 16 Feb 2022 805 0

விரலோடு விரல் சேர்த்து
போகாமல் போவேனோ..
தோள்மேலே தலைசாய்த்து
சாயாமல் சாய்வேனோ..
உன் மடிமீது நானும்,
உறங்கும் நேரம்,
உயிர் போனாலும்,
மீண்டும் பிறப்பேனோ..
நிழலாக உன் பின்னால்,
நாள்தோறும் தொடர்வேனோ,
நீ என்னை காணாமல் போனால்,
மண் மீது சாய்வேனோ..
மண்ணோடு மண்ணாகி
போனாலும் கண்ணே,
உன் கண்ணோடு கண்ணாகி
உறவாட வேண்டும் பெண்ணே..
சத்தமின்றி, நெஞ்சுக்குள்ளே,
யுத்தம் செய்தாலே - நித்தம் தோறும்,
அவள் முகம் தேடி நானும் போவேனே...
மௌனமாய் - உன் பார்வை
சின்னதாய் சிந்திடும்
புன்னகை போதுமே,
நான் வாழ்கின்ற
நொடியும் தருவேன்
உனக்காகவே....
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
10 Nov 2020
டும் டும் பீப்பீ.......
கல்யாணம்..25, 27 வயசுல ஒரு ப்ரஹ்மச்சாரிய லேசா பயமுறுத்தி, அதிகமாபதட்ட படுத்தி, கொஞ்சமா ஷாக் அடிக்கற வைக்கற வார்த்தை, சாதாரண ஷாக் இல்லைங்க,Life Time கா...
17 May 2024
என் கவிதையும், பரிசும்......
இறைவனுக்கு நன்றி, தமிழுக்கு நன்றி, குடும்பத்திற்கு நன்றி, நண்பனுக்கு நன்றி.பல வருடங்கள் கடந்து வந்த முயற்சியும், மொழி காதலும்... என்னை ...
19 Jun 2025
எங்கள் குலதெய்வம்...
"எங்கள் குலதெய்வம்"உயிர், உடலற்று பிரிந்து,மீண்டும் சேரும் நேரத்தின்இடைவெளித் தூரம் தான் – குலதெய்வம்…படைத்தவன் அறிவான்,தருவதும், பெறுவதும்..கேட்காத ப...