When was this photo taken kalyan.
நல்ல நண்பன் வேண்டுமென்று
By Admin - 28 Mar 2020 886 1
தனெக்கென்ன வாழாமல்
பிறர்க்கென்ன வாழும்
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
நிழலென நீயும் வருவாயே,
விழ எழக் கையொன்று தந்தாயே;
விழிகளிலே நீர் வந்தாலும்,
துடைக்கவும் தோளொன்று தந்தாயே...
உயிரென நீயும் இருப்பாயே,
உறவென நீயும் கலந்தாயே...
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
திசைகள் தெரியாமலே,
நானும் இங்கே அலைந்தேனே;
புது சிறகாய் பறக்க,
வானம் ஒன்று தந்தாயே...
உருவத்தை காட்டும் கண்ணாடியும்
தோற்கும் உன் முன்னாடி...
வார்த்தை என்னும் விதையில்,
நம்பிக்கை ஒன்றை தந்தாயே...
ஒன்றாய் சேர்ந்து நின்றாலே,
வெற்றிகள் குவியும் சொன்னாயே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
Add Your Comments
Say Something
Comments
See More Stories
16 May 2020
காதல் கொண்டேனே........
அழகான மாலை நேரம்,அலைபாயும் என் மனம்,நின்னை கண்டதும் - காதல்கொண்டேனே; நானும்காதல் கொண்டேனே..விழியாலே பேசும்,நாடகங்கள் நானறிவேன்,கனவிலும் தோழியே,காற்றை ...
26 May 2025
நீர் என்றுமே.......
தரை தொடும் முகில்அழுவதில்லை,போகும் திசையெல்லாம்அமுதமாய் துளிர்கிறது...மலையின் மடியிலேதாய் போல பாயும் அருவி,சிறு ஓடையின் ஓசையில்,தாகம் தீர்க்கும் நதியி...
19 Mar 2024
எறும்பு
ஒரு பருக்கை சாதத்தின்கனம் - அதைதூக்கிச் செல்லும்எறும்புக்கு மட்டும் தான்தெரியும் !!!- கல்யாணராமன் நாகராஜன் ...