When was this photo taken kalyan.
நல்ல நண்பன் வேண்டுமென்று
By Admin - 28 Mar 2020 849 1
தனெக்கென்ன வாழாமல்
பிறர்க்கென்ன வாழும்
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
நிழலென நீயும் வருவாயே,
விழ எழக் கையொன்று தந்தாயே;
விழிகளிலே நீர் வந்தாலும்,
துடைக்கவும் தோளொன்று தந்தாயே...
உயிரென நீயும் இருப்பாயே,
உறவென நீயும் கலந்தாயே...
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
திசைகள் தெரியாமலே,
நானும் இங்கே அலைந்தேனே;
புது சிறகாய் பறக்க,
வானம் ஒன்று தந்தாயே...
உருவத்தை காட்டும் கண்ணாடியும்
தோற்கும் உன் முன்னாடி...
வார்த்தை என்னும் விதையில்,
நம்பிக்கை ஒன்றை தந்தாயே...
ஒன்றாய் சேர்ந்து நின்றாலே,
வெற்றிகள் குவியும் சொன்னாயே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...
Add Your Comments
Say Something
Comments
See More Stories
03 Mar 2024
துகள்
உன்னில் இருக்கும் அனைத்தையும் - நீ;உதறிவிட்டால்..எஞ்சுவது எதுவோ,அதுவே நீ !!!ஒரு சிறு துகள்.....
28 Aug 2025
என்னை அறியாமல்...
என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...காரண...
23 Sep 2023
புண்ணியம்
கோவிலுக்கு செல்வதும்,தர்மம் செய்வதும்,சுயநலமே...கடந்த காலத்தை மறக்கநிகழ் காலத்தை சரி செய்யபுண்ணியம்...கோவில் படிக்கட்டும் கல்லே,கோவில் சிலையும் கல்லே,...