எங்கள் குலதெய்வம்
By Admin - 19 Jun 2025 224 0

"எங்கள் குலதெய்வம்"
உயிர், உடலற்று பிரிந்து,
மீண்டும் சேரும் நேரத்தின்
இடைவெளித் தூரம் தான் – குலதெய்வம்…
படைத்தவன் அறிவான்,
தருவதும், பெறுவதும்..
கேட்காத பொழுதில் கிடைத்துவிடும்,
கைக்கு எட்டுகின்ற தூரத்தில் மறைந்துவிடும்..
தொடக்கமும் நீ ,
வேதங்கள் ஓதும்
நாதமும் நீ,
யாகங்கள் தரும்
சாம்பலும் நீ,
அன்பில் தெரியும்
உருவமும் நீ,
கோபத்தின்
தனலும் நீ,
அலங்காரியும் நீ,
பத்ர காளியும் நீ
என்னுள்;
கருணையும் நீ,
கொற்றவா, உன்னிடம் ஒன்றும் கேட்டதில்லை,
ஆனால் நீ என்னை அறிய வைத்தாய்,
உன்னையும் அறியச் செய்தாய்…
இருள் நீண்ட பாதையில்,
ஒளியாய், நிழலாய், வழியாய்,
என்னுடன் நடந்தாய்.
வெளியே உன்னை தேடாத இடமில்லை...
ஏனோ மறந்தேன்...
உனக்கும், எனக்கும் கொண்ட உரையாடல்
உள்ளுணர்வாய், என்னுளே என்றும்...
நீயாகவே, நின்னை
எண்ணில் வீற்றிருக்கச் செய்தாய்..
நான் பிறந்த பொழுது,
எல்லோரும் சிரித்தார்கள்,
என் பாட்டி மட்டும் நன்றி
சொன்னால் எங்கள் குல தெய்வத்திற்கு..
என்
பிறப்பும் நீ,
வாழ்வும் நீ,
இறப்பும் நீ,
பரம்பரை கடந்து,
ஒரு பரணாய்,
துணை நிற்பதுவே,
முன்னோர்களே...
காலத்தால் அழியாத, மறையாத
ஒளியின் உருவமே, அருவமே..
அவ்விதமே,
குலதெய்வமே,
எங்கள் அங்காளம்மண்ணே....
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
17 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில குளங்கள், குட்டைகள், எப்போதும் வீசும் ஜி...
14 Sep 2021
எதிர்பாராததை எதிர்பாருங்கள்...
எதிர்பார்ப்பு - உண்மையிலே, எதிர்பார்த்தா என்னவாகும் ?எதிர்பார்த்தது நடந்தால் சந்தோஷம். நடக்கலைனா அது நமக்கு வருத்தம். அதன்தொடர்ச்சியாக வன்மம், துக்கம்...
12 Jan 2025
சிறந்த கவிதைக்காக பரிசு...
கன்னிமரா நூலகத்தில், இலக்கியச்சோலை நடத்திய கவியரங்கில், சிறந்த கவிதைக்காக பரிசு வழங்கப்பட்டது...இலக்கியச்சோலை ஆசிரியர் அய்யா தமிழினியின், இலக்கிய நண்ப...