உரையாடல் தீராமல்

By Admin - 12 Jun 2025 285 0

மாலை,
நான் வீடு திரும்பும் முன்னே 
சொல்லாமல் வெகுதூரம் சென்றாள்,
அவள் இல்லை...
வீடே திருவிழாப்  போல் இருந்தது..
கையில் அவளுக்குப் பிடித்த பூவுடன், 
இரவு முழுவதும் விழித்திருந்து
இன்று நடந்ததை எல்லாம் சொல்லிமுடிக்கும் முன்னே,
முந்திக்கொண்டு தூங்கிவிட்டாள்..
அவளுடன் சேர்ந்து,
எங்கள் உரையாடலும் புதைந்தது....

- கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.