very nice starting
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை தொடக்கம் !!!
By Admin - 17 Jun 2021 1007 1

அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில குளங்கள், குட்டைகள், எப்போதும் வீசும் ஜில்லென்ற காற்று, மொத்தமாக இருநூறு வீடுகள், பஞ்சாயத்து ஆலமரங்கள், தெரு எங்கும் நிம்மதியாக சுற்றி தெரியும் ஆடு, மாடு, கோழி அதனுடன் விளையாட சில சின் வண்டுகள், மண் தரையிலும், சேற்றிலும் தவழும் பிஞ்சுகள், பாரபக்ஷம் இன்றி வளரும் குழந்தைகள், நேரில் யாரை கண்டாலும், நல்ல இருக்கீங்களா, வூட்டுல எப்படி இருக்காங்க, சாப்டீங்களா என்று நலம் விசாரிக்கும் நெஞ்சங்கள், வன்மம் என்ற சொல் மறந்த அந்த அழகிய கிராமம் மதுராந்தகம் பக்கத்துல இருக்கற "நல்லமூர்". ஊர் பேர் மட்டும் இல்ல, அங்க இருக்கற எல்லாரும் அப்படித்தான்..
இந்த அழகான ஊர்ல, பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, கல்யாணம் பண்ணிக்கிட்டு, புள்ள பெத்துக்கிட்டு, பேரன், பேத்தி எடுத்தி சந்தோஷமா வாழற எழுபது வயது நெருங்கும் ஆதர்ஷ தம்பதி முத்துகாளையும், பருத்தியம்மாளும்..விவசாயம் செஞ்சு, சில வீட்டுல பாத்திரம் கழுவி, ரெண்டு வேலை மட்டும் சாப்பிட்டுக்கிட்டு, வர காசுல கொஞ்சமா கொஞ்சமா சேர்த்து வெச்சு புள்ளகுட்டிகளை படிக்கச் வெச்சு, பட்டணத்துல வேளைக்கு அனுப்பறதுக்கு அம்பது வருஷம் ஓடி போச்சு... திரும்பி பார்த்த, இவங்களோட பாதி வாழ்க்கை, இவர்களுக்காக இல்லாம புள்ளைங்க, பேரங்கனு போய்டுச்சு..
திடிர்னு, ஒரு நாள்... அதிகாலை ஒரு 4 மணி இருக்கும், பருத்தியம்மாள் ரொம்ப அசந்து தூங்கறப்போ, முத்துக்காளை மெதுவா அவங்க கிட்ட போய், ஏலே, கண்ணு, பருத்தி கண்ணு, எந்திருடா, எனக்கு ஒரு யோசனை.. வெகு நேரம் முயற்சி செய்தும் பலனில்லை.. அவளின், தலையை ரெண்டு ஆட்ட.. காலின் விரலை சொடுக்கு எடுக்க, என்னமோ செய்ய, பருத்தியம்மாள் எதற்கும் அசையவில்லை.. சற்றே, பயந்து போய். ஏலே, விளையாடாத.. இப்போதான் எனக்கு ஒரு யோசனை வந்துருக்கு இத்தனை வருஷத்துல..நீ பல நாளா சொல்ற அப்போ தெரில.. ஒழுங்கா எந்திரியா..என்ற சொல்லிக்கொண்டே யோசிக்காமல், சட்டென்று அருகில் சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்த அவள் மூஞ்சில் ஊற்ற, ஏதோ கெட்ட கனா கண்டது போல், தூக்கி வாரி போட்டு கொண்டு பருத்தி எந்திரிக்க, ஐயோ என்னாச்சு !!!
முத்துக்காளை அப்பாடா என்று பெரு மூச்சு விட..கொஞ்ச நேரத்துல அடி வயிறு கலங்கிடிச்சு...
தலையில் இருந்து, கழுத்து வரை முழுதும் தண்ணீர்..சற்றும் கோபிக்காத பருத்தி, என்னய்யா பசிக்குதா, எதுனா சாப்பிடறீங்களா..தோசை சுட்டு தரவா..அதெல்லாம் இல்ல பருத்தி, எனக்கு ஒரு யோசனை, இப்போவே, உடனே செய்ய போறோம் அத.
இந்த நேரத்துல, இப்படி எழுப்பி என்ன சொல்லப்போறீங்க
அது என்னனா..
(தொடரும்)
Add Your Comments
Say Something
Comments
See More Stories
23 Aug 2024
யார்
கூட்டத்தில் யார் என்றுநீ உணரப்படுவாய்..தனிமையில் யார் என்றுநீ அறியப்படுவாய்…...
28 May 2021
மாற வைக்கும் மாயை...
போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து,உண்ணும் உணவு,உடுத்தும் உடை,காதல்,அன்பு,காமம்,பெருமை,புகழ்,அனைத்திற்க்கும்போதும் என்ற நிலை உண்டு,ஏனோ விதிவ...
11 Sep 2022
வெள்ளை
சில நொடிகள் இமைக்காமல்,கடிகாரத்தின் முட்கள் நகர்வதை பார்க்கும் பொழுது காலத்தில் வேகத்தை கண்டு பயம் தொற்றி கொண்டது.....