இறைவா
By Admin - 05 Dec 2020 1026 0

ஆயிரம் விழி
கொண்ட இறைவா,
உன்னொரு, விழியால்
என்னை பாராயோ,
உன் மொழியில்
அழைத்தால் வருவாயோ,
ஊமையாய் நின்றால்
என் செய்வாயோ
ஆதியும்
அந்தமும் நீயே,
யாதுமாகி இருப்பவனே,
எங்கும் எதிலும்
ஓளிந்திருப்பவனே,
நின்னை - தேடுகிறேன்
எங்கெங்கோ
மலைகளில், நீரில்
மூழ்கி மறைந்தாயோ
நினைத்தால் வருவாயோ,
அழுதால் துணை நிற்பாயோ,
இறைவனே,
உன்னை வெளியில்
தேடுவது ஏனோ - என்னுள்
நீ யும் இருப்பாயோ,
உணர்வுகள்;
ஆயிரம் இருப்பதால்,
அன்பில் மட்டும்
தெரிவாயோ..
வேதங்களின்
அர்த்தமும்; நீயே,
வேள்விகள் தரும்
கண்ணீரும் நீயே;
சிதறிய துகள்
கற்கள் கொண்டு
சொற்பனம் கண்டனே
அருவமாய் யல்ல
உருவமாய் கொண்டேனே..
அழைத்திட பல
பெயர்கள் கண்டனே
உன்னை அருகில்
காண பல கோடி
தர கண்டனே..
வறுமையில் வர
ஏன் மறுப்பாயோ..
உன் பாதமே
கதி யென்று
விழுந்தேனே;
என்னை மேலேற்ற
சக்தி தருவாயே..
இறைவா,
நீயே
உயிராய் கலந்தாய்..
உணர்வாய் புரிந்தாய்..
வரம்கள் ஏதும் தேவையில்லை,
துணையாய் மட்டும் வருவாய்..
என் இறைவா, இறைவா...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
அன்பு - Haiku...
வெண்ணை திருடி தின்பது கூட, குறும்புத்தனம் என்று சொல்லவும்,அன்பினால் மட்டுமே முடியும் !!!...
04 Feb 2020
கடவுளை தேடி !!!...
விழியுண்டு, வழியுண்டு, காணாத கண் கொண்டு !!! நின்னை தேடா - எங்கும்,தேடல் தொடர்ந்திட...நித்தம் தோன்றும்; பெயரெல்லாம் உன்னை அழைத்திட,...
04 Jul 2020
Night Shifts
Once the BPO culture evolved, the night shifts became so trendy. So many brains got tuned to work only at night rather than morning. People don't unde...