இறைவா
By Admin - 05 Dec 2020 919 0

ஆயிரம் விழி
கொண்ட இறைவா,
உன்னொரு, விழியால்
என்னை பாராயோ,
உன் மொழியில்
அழைத்தால் வருவாயோ,
ஊமையாய் நின்றால்
என் செய்வாயோ
ஆதியும்
அந்தமும் நீயே,
யாதுமாகி இருப்பவனே,
எங்கும் எதிலும்
ஓளிந்திருப்பவனே,
நின்னை - தேடுகிறேன்
எங்கெங்கோ
மலைகளில், நீரில்
மூழ்கி மறைந்தாயோ
நினைத்தால் வருவாயோ,
அழுதால் துணை நிற்பாயோ,
இறைவனே,
உன்னை வெளியில்
தேடுவது ஏனோ - என்னுள்
நீ யும் இருப்பாயோ,
உணர்வுகள்;
ஆயிரம் இருப்பதால்,
அன்பில் மட்டும்
தெரிவாயோ..
வேதங்களின்
அர்த்தமும்; நீயே,
வேள்விகள் தரும்
கண்ணீரும் நீயே;
சிதறிய துகள்
கற்கள் கொண்டு
சொற்பனம் கண்டனே
அருவமாய் யல்ல
உருவமாய் கொண்டேனே..
அழைத்திட பல
பெயர்கள் கண்டனே
உன்னை அருகில்
காண பல கோடி
தர கண்டனே..
வறுமையில் வர
ஏன் மறுப்பாயோ..
உன் பாதமே
கதி யென்று
விழுந்தேனே;
என்னை மேலேற்ற
சக்தி தருவாயே..
இறைவா,
நீயே
உயிராய் கலந்தாய்..
உணர்வாய் புரிந்தாய்..
வரம்கள் ஏதும் தேவையில்லை,
துணையாய் மட்டும் வருவாய்..
என் இறைவா, இறைவா...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
13 Feb 2022
இதற்கு பெயர்தான்......
கொஞ்சம் கொஞ்சலும்,கொஞ்சிடும் காதலும்.சிணுங்கும் இசையும்.கண்டேனடி,உன்னிடத்தில்...நாணம் மறக்கிறேன்,நானும் மறக்கிறேன்,விழிகளில் இருளோ,உலகம் சுருங்குதே,உன...
29 Mar 2020
Lock Down is not Same for Ever...
The above image is completely true, if we are nested with a place with some stocks of foods then this 21 days is completely break for the faster ...
09 Feb 2020
பிஞ்சு முகம் !!!...
பிஞ்சு முகம் வாட,பால் வாங்க இருபது ருபாய் ; பசியில் அழுகை வீட்டை மட்டுமில்லை - என்உயிரையும் இரண்டாகியது..உண்டில் உடைக்கப்பட்டது - ஏனோ,மறந்து போனேன் அத...