இறைவா
By Admin - 05 Dec 2020 977 0

ஆயிரம் விழி
கொண்ட இறைவா,
உன்னொரு, விழியால்
என்னை பாராயோ,
உன் மொழியில்
அழைத்தால் வருவாயோ,
ஊமையாய் நின்றால்
என் செய்வாயோ
ஆதியும்
அந்தமும் நீயே,
யாதுமாகி இருப்பவனே,
எங்கும் எதிலும்
ஓளிந்திருப்பவனே,
நின்னை - தேடுகிறேன்
எங்கெங்கோ
மலைகளில், நீரில்
மூழ்கி மறைந்தாயோ
நினைத்தால் வருவாயோ,
அழுதால் துணை நிற்பாயோ,
இறைவனே,
உன்னை வெளியில்
தேடுவது ஏனோ - என்னுள்
நீ யும் இருப்பாயோ,
உணர்வுகள்;
ஆயிரம் இருப்பதால்,
அன்பில் மட்டும்
தெரிவாயோ..
வேதங்களின்
அர்த்தமும்; நீயே,
வேள்விகள் தரும்
கண்ணீரும் நீயே;
சிதறிய துகள்
கற்கள் கொண்டு
சொற்பனம் கண்டனே
அருவமாய் யல்ல
உருவமாய் கொண்டேனே..
அழைத்திட பல
பெயர்கள் கண்டனே
உன்னை அருகில்
காண பல கோடி
தர கண்டனே..
வறுமையில் வர
ஏன் மறுப்பாயோ..
உன் பாதமே
கதி யென்று
விழுந்தேனே;
என்னை மேலேற்ற
சக்தி தருவாயே..
இறைவா,
நீயே
உயிராய் கலந்தாய்..
உணர்வாய் புரிந்தாய்..
வரம்கள் ஏதும் தேவையில்லை,
துணையாய் மட்டும் வருவாய்..
என் இறைவா, இறைவா...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
23 Jun 2025
இன்பத்துள் இன்பம்...
இன்பத்துள் இன்பம் செவிச்சொல் இன்சொலால்நன்பால் நலங்கொடுக்கும்.அந்திமாலையின் அடைமழை நிறைந்த,ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் ...
18 Jan 2023
அப்பா
உன் உயிரணுவில், என்னை நகலெடுக்க..நின் முதற் வங்கணம் நீயன்றோ..கருவறையில்,என்னை காணாது, நீ கொண்ட காதல்..அதன் யான் காணாமல், யாதனம் கொ...
11 Feb 2020
நானும் ஒரு தகப்பனாக...
உன் உயிரணுவில், என்னை நகலெடுக்க..நின் முதற் வங்கணம் நீயன்றோ !!!கருவறையில்,என்னை காணாது, நீ கொண்ட காதல்..அதன் யான் காணாமல், யாதனம் ...