இறைவா
By Admin - 05 Dec 2020 976 0

ஆயிரம் விழி
கொண்ட இறைவா,
உன்னொரு, விழியால்
என்னை பாராயோ,
உன் மொழியில்
அழைத்தால் வருவாயோ,
ஊமையாய் நின்றால்
என் செய்வாயோ
ஆதியும்
அந்தமும் நீயே,
யாதுமாகி இருப்பவனே,
எங்கும் எதிலும்
ஓளிந்திருப்பவனே,
நின்னை - தேடுகிறேன்
எங்கெங்கோ
மலைகளில், நீரில்
மூழ்கி மறைந்தாயோ
நினைத்தால் வருவாயோ,
அழுதால் துணை நிற்பாயோ,
இறைவனே,
உன்னை வெளியில்
தேடுவது ஏனோ - என்னுள்
நீ யும் இருப்பாயோ,
உணர்வுகள்;
ஆயிரம் இருப்பதால்,
அன்பில் மட்டும்
தெரிவாயோ..
வேதங்களின்
அர்த்தமும்; நீயே,
வேள்விகள் தரும்
கண்ணீரும் நீயே;
சிதறிய துகள்
கற்கள் கொண்டு
சொற்பனம் கண்டனே
அருவமாய் யல்ல
உருவமாய் கொண்டேனே..
அழைத்திட பல
பெயர்கள் கண்டனே
உன்னை அருகில்
காண பல கோடி
தர கண்டனே..
வறுமையில் வர
ஏன் மறுப்பாயோ..
உன் பாதமே
கதி யென்று
விழுந்தேனே;
என்னை மேலேற்ற
சக்தி தருவாயே..
இறைவா,
நீயே
உயிராய் கலந்தாய்..
உணர்வாய் புரிந்தாய்..
வரம்கள் ஏதும் தேவையில்லை,
துணையாய் மட்டும் வருவாய்..
என் இறைவா, இறைவா...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Jun 2025
இரகசியம்
உள்ளே வெளியேபல முறை போய் வந்தாலும்வீட்டில் நடக்கும் இரகசியகங்களை வெளியே சொல்லாத ஒரே ஜீவன் என் வீட்டின் பல்லி......
10 Jul 2020
ஒரு மஹாநடிகன்......
காட்சிகள் மாறும், கனவுகள் தொடரும்,வாழ்க்கை ஒரு தொடர்கதை..தினமொரு புது நாடகம்,பல வேஷம், சில மனிதர்கள்,நானும் ஒரு கலைஞன்,உலகம் அறியா மஹாநடிகன்...
27 Jun 2020
கண்கள் நீயே......
கண்கள் நீயே,காதலும் நீயே,என் விழிகளில் வழியும் ஜீவனும் நீயே...உயிரும் நீயே,உறவும் நீயே,என் உதிரத்தில் கலந்தஉருவமும் நீயே...அடி..வாழ்கின்ற நொடியேஉ...