கடவுளை தேடி !!!
By Admin - 04 Feb 2020 1080 0

விழியுண்டு, வழியுண்டு,
காணாத கண் கொண்டு !!!
நின்னை தேடா - எங்கும்,
தேடல் தொடர்ந்திட...
நித்தம் தோன்றும்;
பெயரெல்லாம்
உன்னை அழைத்திட,
சிந்தையில் தோன்றும்;
உருவமெல்லாம்
படைத்திட, எங்கோ தேடி;
இங்கே தஞ்சம் புகுந்திட,
ஆயிரம் விழிகொண்டு
உன்னை காணவில்லை,
சத மானுடர்க்குக்
புலப்படவில்லை..
சிதறிய துகள் கற்கள்;
எங்கோ சிதறிட,
அதினுள் - ஒரு
கலையாய் உருவெடுக்க,
பல புரியாத பரி பாஷைகள்
உனக்காக எழுதிட,
அர்த்தம் ஏதும் அறியா,
தெரிந்த மொழியில்
உன்னை அழைத்திட,
மலைகளிலும்,
நீர்களிலும் மூழ்கி,
உன்னை தேடிட,
பல ஆயிரம்
ஆண்டுகள் தாண்டியும்,
தேடல் தீராமல் - உன்னை
உணர மட்டுமே
முடிந்த எனக்கு,
பெயர் ஒன்று
தேடி சென்றேன்....
தோன்றும் பெயர்கள், - பல
கலகம் உண்டாகிட,
கருணை நீட்டும்
கரங்கள் முன்னே,
உன்னை கடவுள்
என்ற மத்தியில்,
அன்பு ,
என்ற சொல் புழங்கிட,
கனா கண்டேன் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Jul 2020
Night Shifts
Once the BPO culture evolved, the night shifts became so trendy. So many brains got tuned to work only at night rather than morning. People don't unde...
27 May 2021
ஆதலால் இவர் கடவுளோ......
மனிதன், குரங்கில் இருந்து வந்தான் என்றால்,பல குரங்குகள் இன்னும் மனிதனாய்ஏன் மாறவில்லை...எட்டாவது பிள்ளைதன்னை கொல்லும் என்று அறிந்து - வ...
29 Mar 2020
Lock Down is not Same for Ever...
The above image is completely true, if we are nested with a place with some stocks of foods then this 21 days is completely break for the faster ...