கடவுளை தேடி !!!
By Admin - 04 Feb 2020 1001 0

விழியுண்டு, வழியுண்டு,
காணாத கண் கொண்டு !!!
நின்னை தேடா - எங்கும்,
தேடல் தொடர்ந்திட...
நித்தம் தோன்றும்;
பெயரெல்லாம்
உன்னை அழைத்திட,
சிந்தையில் தோன்றும்;
உருவமெல்லாம்
படைத்திட, எங்கோ தேடி;
இங்கே தஞ்சம் புகுந்திட,
ஆயிரம் விழிகொண்டு
உன்னை காணவில்லை,
சத மானுடர்க்குக்
புலப்படவில்லை..
சிதறிய துகள் கற்கள்;
எங்கோ சிதறிட,
அதினுள் - ஒரு
கலையாய் உருவெடுக்க,
பல புரியாத பரி பாஷைகள்
உனக்காக எழுதிட,
அர்த்தம் ஏதும் அறியா,
தெரிந்த மொழியில்
உன்னை அழைத்திட,
மலைகளிலும்,
நீர்களிலும் மூழ்கி,
உன்னை தேடிட,
பல ஆயிரம்
ஆண்டுகள் தாண்டியும்,
தேடல் தீராமல் - உன்னை
உணர மட்டுமே
முடிந்த எனக்கு,
பெயர் ஒன்று
தேடி சென்றேன்....
தோன்றும் பெயர்கள், - பல
கலகம் உண்டாகிட,
கருணை நீட்டும்
கரங்கள் முன்னே,
உன்னை கடவுள்
என்ற மத்தியில்,
அன்பு ,
என்ற சொல் புழங்கிட,
கனா கண்டேன் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
19 Sep 2021
படித்தவுடன் கிழித்துவிடவும்...
கற்கை நன்றே, கற்கை நன்றே,பிச்சை புகினும், கற்கை நன்றே..தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை,எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்..உண்மையில், இது போல் வரிகளும், தத...
22 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை..அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில கு...
11 Feb 2020
நானும் ஒரு தகப்பனாக...
உன் உயிரணுவில், என்னை நகலெடுக்க..நின் முதற் வங்கணம் நீயன்றோ !!!கருவறையில்,என்னை காணாது, நீ கொண்ட காதல்..அதன் யான் காணாமல், யாதனம் ...