கடவுளை தேடி !!!
By Admin - 04 Feb 2020 1042 0

விழியுண்டு, வழியுண்டு,
காணாத கண் கொண்டு !!!
நின்னை தேடா - எங்கும்,
தேடல் தொடர்ந்திட...
நித்தம் தோன்றும்;
பெயரெல்லாம்
உன்னை அழைத்திட,
சிந்தையில் தோன்றும்;
உருவமெல்லாம்
படைத்திட, எங்கோ தேடி;
இங்கே தஞ்சம் புகுந்திட,
ஆயிரம் விழிகொண்டு
உன்னை காணவில்லை,
சத மானுடர்க்குக்
புலப்படவில்லை..
சிதறிய துகள் கற்கள்;
எங்கோ சிதறிட,
அதினுள் - ஒரு
கலையாய் உருவெடுக்க,
பல புரியாத பரி பாஷைகள்
உனக்காக எழுதிட,
அர்த்தம் ஏதும் அறியா,
தெரிந்த மொழியில்
உன்னை அழைத்திட,
மலைகளிலும்,
நீர்களிலும் மூழ்கி,
உன்னை தேடிட,
பல ஆயிரம்
ஆண்டுகள் தாண்டியும்,
தேடல் தீராமல் - உன்னை
உணர மட்டுமே
முடிந்த எனக்கு,
பெயர் ஒன்று
தேடி சென்றேன்....
தோன்றும் பெயர்கள், - பல
கலகம் உண்டாகிட,
கருணை நீட்டும்
கரங்கள் முன்னே,
உன்னை கடவுள்
என்ற மத்தியில்,
அன்பு ,
என்ற சொல் புழங்கிட,
கனா கண்டேன் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
12 Jun 2025
உரையாடல் தீராமல்...
மாலை,நான் வீடு திரும்பும் முன்னே சொல்லாமல் வெகுதூரம் சென்றாள்,அவள் இல்லை...வீடே திருவிழாப் போல் இருந்தது..கையில் அவளுக்குப் பிடித்த பூவுடன்...
09 Jun 2025
இரகசியம்
உள்ளே வெளியேபல முறை போய் வந்தாலும்வீட்டில் நடக்கும் இரகசியகங்களை வெளியே சொல்லாத ஒரே ஜீவன் என் வீட்டின் பல்லி......
25 Jun 2025
தவறில்லை
நான் உழைத்தது தவறில்லை,என் உழைப்பை எங்கு போடவேண்டும் என்று தெரியாமல்உழைத்ததுதான் தவறு....- கல்யாணராமன் நாகராஜன் ...