என் கடைசி ஆசை...

By Admin - 18 Jan 2024 416 8

நிழலாக மாறிய நான்,
நிஜமாக உறங்கும் நேரம்..

என்னை,
அடைக்க வேண்டாம்,
சிறு கண்ணாடி பெட்டிக்குள்..

இந்த இறுதி நிமிடத்தில்,

என் தலை கோதிக்கொண்டே,
என் அம்மா அவள் மடி மீது 
வைத்து கொள்ளலாம்..

என் கைகளை மார் மீதும்,
கால்களை மடி மீதும்,
சிறு நேரம் நான் களைப்பாற
என் அப்பா அமுக்கி விடலாம்...

என் கரம் பிடித்தவள்,
என் கைகள் பிடித்துக்கொண்டு,
இறுதி நொடிகள் நெருங்க,
மீண்டும் ஒரு முறை வாழ்ந்திட,
நினைக்கலாம்...

இது தூங்கும் நாடகம்
என்று எண்ணி - என்னை
தட்டி எழுப்ப என் மகள்
முற்படலாம் - பாவம்
எழுப்பட்டும்...

என் நண்பர்கள் - கடைசி 
ஒரு முறை கட்டி அணைத்து 
அழுதிடலாம்...

அக்காவும், தங்கையும்,
அண்ணனும், தம்பியும்,
என்னை உலுக்கி 
மீண்டு வா - நாங்கள்
இருக்கிறோம், விடமாட்டோம் 
என்று அழலாம்....

பேசாத உறவுகளும்,
பேசிய உறவுகளும்,
விடை பெறும் நேரம்,
என் பாதங்கள் தொடலாம்..

முகம் மறந்து போன,
உறவுகளும்,
நண்பர்களும்,
கடவுள் கையெழுத்து யிட்ட,
பூக்களாய் என் மீது 
விழலாம்...

சிறுது நேரம் தானே,
போகட்டும்,
சென்ற பிறகு..
வெறும் ஈரம் 
தானே...

உடலாய் உணர்வற்று 
போனாலும் - எனக்கும்
தேவை அந்த இறுதி வருடல்..

என்னை,
அடைக்க வேண்டாம்,
சிறு கண்ணாடி பெட்டிக்குள்..

Add Your Comments

Say Something

 

Comments

from Chandramouli Subramanian at 2024-11-07 15:24:39

Heart- touching lines


from Sivaraj at 2024-01-19 20:11:36

இறந்து போன ஒர் ஆன்மா தன் உடலின் கடைசி ஆசைகளை / எதிர்பார்ப்புகளை எதார்த்தமாக பதிந்தது அருமை.


from Sankari Sowmya at 2024-01-19 13:03:29

Have no words for...Drowning in tears..!! Tremendous...


from Lalitha at 2024-01-18 20:53:09

Awesome thought.. No words to appreciate


from Lalitha at 2024-01-18 20:53:07

Awesome thought.. No words to appreciate


from SANKARAN NAGARAJAN at 2024-01-18 20:53:03

வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிவதற்குள் வாழ்நாள் முடியும் தருணம் கடவுளிடம் இன்னும் கொஞ்சகாலம் ஆயுளை நீடித்தால் ஒழுக்கம் நிறைந்ததும் பரோபகாரியாகவும் வாழ்ந்து புண்ணியம் சேர்த்து தங்களிடம் வருகிறேன் என்று நம் ஆத்மா கெஞ்சும் போதே கடவுள் நம்மை வெகுதூரம் கூட்டிசென்று விடுகிறார். வாழும் போதே நல்லதை செய்தால் கடவுளே நமக்கு சில வருடம் போனசாக கொடுக்கலாம். அறுபதை தாண்டினால் போனஸ்தான்.


from SANKARAN NAGARAJAN at 2024-01-18 20:15:34

மிகவும் அற்புதமான யதார்த்தமான வார்த்தைகள். மனதை மிகவும் சோகமாக்கும் அர்த்தங்கள். அதிலும் இது தூங்கும் நாடகம் வரிகள் அருமை ஆனால் மனதை குடைகிறது. வாழ்த்துக்கள் அப்பா


from Anjanasri at 2024-01-18 11:07:48

Super bro