காற்றாய் நானும் கரைந்தேனே
By Admin - 11 Jul 2020 751 0

என் கனவினில், கனவினில்
வந்து வந்து செல்கிறாய்
உன் நினைவுகள் - என்னை
தேடி தேடி கொல்லுதே
உன் கரு விழிகள் - என்னை
கண்டதும் இதயம் களவு போனதே,
நீ என்னை - கடந்து செல்கையில்
உலகம் மறந்து போனதே..
நம் இதயங்கள் பேசிட,
பரி பாஷை ஒன்றும் இல்லையே...
விழிகள் இரண்டும், தடம் மாறிட
வழிகள் ஏதும் இல்லையே
கண்களின் ஓரமாய்,
காதல் வந்த செல்ல...
செல்லமாய் உன்னை அழைத்திட,
வார்த்தை போதவில்லையே
இமைகளின் சிமிட்டலில்,
நானும் கரைந்து போக
காற்றிலே உன் கூந்தலும்
என்னை கடத்தி செல்ல
தேடினேன் தேடினேன்,
யாரடி என் காதலி - நீ
வந்ததும், கரைந்ததே
என் உயிர் துளிகளே
உன்னிடம் பேசிட,
நூறு கதைகள் உண்டு
அதை சொல்லிட,
கட்டிவைத்தேன் இரவையும்
உன் தோளிலே
நான் உறங்கிட,
தென்றல் என்னை தீண்டுதே
அது சென்ற தடயம் - உந்தன்
வாசம் வீசி போகுதே
உன்னை நான் சேர்ந்திட,
நாட்கள் தூரம் இல்லையே
அதுவரை காத்திருக்க,
என் நேரத்திற்கு
பொறுமை இல்லையே
என்னை நீ கண்டதும் - காற்றில்
என் விரல்கள் உன்னை தீண்டுதே
உன் சுவாசம் என்னை உரசிட,
காற்றாய் நானும் கரைந்தேனே..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
13 Apr 2022
நானடி...
விழிகள் பறித்தாள்மௌனம் கொடுத்தாள்மொழிகள் மறந்தேன்இதழை சுழித்தாய் இதயம் தொலைத்தேன்..நானடி...காதலே காதலே அருகினில் வா...மேகத்தில் ஏன் ஒளி...
16 Feb 2022
உனக்காகவே
விரலோடு விரல் சேர்த்து போகாமல் போவேனோ..தோள்மேலே தலைசாய்த்துசாயாமல் சாய்வேனோ..உன் மடிமீது நானும்,உறங்கும் நேரம்,உயிர் போனாலும்,மீண்டும் பிறப்பேனோ....
11 Jul 2020
கடனாளி
வீட்டில் பசியாற காத்திருக்கும் மக்கள்,துடிக்கும் இதயமாய் சொந்தங்கள்,நலம் கேட்கும் பக்கத்தினர்,அன்பின் உருவமாய் சில உறவுகள்,அணைத்து நிஜ முக பிம்பங...