சித்திரைப் பெண்ணே வருக!
By Admin - 23 Apr 2024 894 0

இளவேனில் பிறக்கும் முகிழே,
முழு மதியாய் திங்கள் அன்று;
வெய்யோன் மடியில் தவழும் தமிழே;
பேரிளம் பெண்ணே, நீ வருக !!!
வீட்டின் முற்றத்தில்,
அழகிய மாக்கோலம் யிட்டு,
சாணமும், பூக்களும் உறவாட,
எறும்புக்கு விருந்தாய்; இயற்கையின்
மொழியாய், நீ வருக !!!
முக்கனியோடு, பூக்களும்,
அணிகலனும்; நாணயமாய் வந்த
நாணயங்களோடு; இறைவா
அகவிழியோடு, காண்கிறேன் நிழல்காணில்..
மா யிலையிலும், மஞ்சளிலும்
எதிர்மறை எண்ணங்கள் கரைந்தோட;
வாழ்வில் சமநிலை உணர்த்தும்,
அறுசுவையாய்; புது பயணம் செல்ல
வா பெண்ணே...
சிரிப்போடும், சிறப்போடும்,
எழுச்சி கண்டேன்; நின் பிறப்பிலே
நிலமகள்; எங்கும் புன்னகை பூக்கட்டும்
வருகையை - வாழ்த்துகிறேன்,
பெண்ணே நீ வருக !!!
-
கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
20 Sep 2020
One of the special moments of ...
If there is a rewind button in life, I wish to freeze those special moments of my life. Life is a interesting game, we will not realize the impo...
28 Aug 2025
என்னை அறியாமல்...
என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...காரண...
12 Jan 2025
சில உணர்வுகள்...
அந்திமாலையின் அடைமழை நிறைந்த,ஒளிந்து கொண்ட மேகக் கூட்டத்தின்,வழி தடமாய், ஒளிர்ந்த மஞ்சள் வெயிலில்,புதிதாய் பிறந்த புல்லின் மேல் பனித்துளிஅலைந்து அடங்க...