சித்திரைப் பெண்ணே வருக!

By Admin - 23 Apr 2024 811 0

இளவேனில் பிறக்கும் முகிழே,
முழு மதியாய் திங்கள் அன்று;
வெய்யோன் மடியில் தவழும் தமிழே; 
பேரிளம் பெண்ணே, நீ வருக !!!

வீட்டின் முற்றத்தில், 
அழகிய மாக்கோலம் யிட்டு,
சாணமும், பூக்களும் உறவாட,
எறும்புக்கு விருந்தாய்; இயற்கையின் 
மொழியாய், நீ வருக !!!

முக்கனியோடு, பூக்களும்,
அணிகலனும்; நாணயமாய் வந்த
நாணயங்களோடு; இறைவா
அகவிழியோடு, காண்கிறேன் நிழல்காணில்..

மா யிலையிலும், மஞ்சளிலும்
எதிர்மறை எண்ணங்கள் கரைந்தோட; 
வாழ்வில் சமநிலை உணர்த்தும்,
அறுசுவையாய்; புது பயணம் செல்ல 
வா பெண்ணே...

சிரிப்போடும், சிறப்போடும்,
எழுச்சி கண்டேன்; நின் பிறப்பிலே
நிலமகள்; எங்கும் புன்னகை பூக்கட்டும் 
வருகையை - வாழ்த்துகிறேன்,
பெண்ணே நீ வருக !!!

-
கல்யாணராமன் நாகராஜன்

Add Your Comments

Say Something

 

Comments

No comments.