சித்திரைப் பெண்ணே வருக!
By Admin - 23 Apr 2024 853 0

இளவேனில் பிறக்கும் முகிழே,
முழு மதியாய் திங்கள் அன்று;
வெய்யோன் மடியில் தவழும் தமிழே;
பேரிளம் பெண்ணே, நீ வருக !!!
வீட்டின் முற்றத்தில்,
அழகிய மாக்கோலம் யிட்டு,
சாணமும், பூக்களும் உறவாட,
எறும்புக்கு விருந்தாய்; இயற்கையின்
மொழியாய், நீ வருக !!!
முக்கனியோடு, பூக்களும்,
அணிகலனும்; நாணயமாய் வந்த
நாணயங்களோடு; இறைவா
அகவிழியோடு, காண்கிறேன் நிழல்காணில்..
மா யிலையிலும், மஞ்சளிலும்
எதிர்மறை எண்ணங்கள் கரைந்தோட;
வாழ்வில் சமநிலை உணர்த்தும்,
அறுசுவையாய்; புது பயணம் செல்ல
வா பெண்ணே...
சிரிப்போடும், சிறப்போடும்,
எழுச்சி கண்டேன்; நின் பிறப்பிலே
நிலமகள்; எங்கும் புன்னகை பூக்கட்டும்
வருகையை - வாழ்த்துகிறேன்,
பெண்ணே நீ வருக !!!
-
கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
அன்பு - Haiku...
வெண்ணை திருடி தின்பது கூட, குறும்புத்தனம் என்று சொல்லவும்,அன்பினால் மட்டுமே முடியும் !!!...
08 Dec 2020
நீ
காற்றின் ஒலி நீ,அருவியின் ஓசை நீ,இதயத்தின் இசை நீ,குழந்தையின் சிரிப்பும் நீவேதங்கள் ஓதும்நாதமும் நீ,யாகங்கள் தரும் சாம்பலும் நீ,அன்பில் தெரியும்&...
28 May 2022
வாழு, வாழுந்துவிடு......
நினைத்தால்நினைத்தால் நினைத்ததைநினைத்துதினம் - நீ உழைத்தால்நினைத்ததுநடக்கும்என்றால்தெய்வத்திற்குவேலை யில்லை...நினைப்பது, ஒன்று நடப்பதும்...