சித்திரைப் பெண்ணே வருக!
By Admin - 23 Apr 2024 811 0

இளவேனில் பிறக்கும் முகிழே,
முழு மதியாய் திங்கள் அன்று;
வெய்யோன் மடியில் தவழும் தமிழே;
பேரிளம் பெண்ணே, நீ வருக !!!
வீட்டின் முற்றத்தில்,
அழகிய மாக்கோலம் யிட்டு,
சாணமும், பூக்களும் உறவாட,
எறும்புக்கு விருந்தாய்; இயற்கையின்
மொழியாய், நீ வருக !!!
முக்கனியோடு, பூக்களும்,
அணிகலனும்; நாணயமாய் வந்த
நாணயங்களோடு; இறைவா
அகவிழியோடு, காண்கிறேன் நிழல்காணில்..
மா யிலையிலும், மஞ்சளிலும்
எதிர்மறை எண்ணங்கள் கரைந்தோட;
வாழ்வில் சமநிலை உணர்த்தும்,
அறுசுவையாய்; புது பயணம் செல்ல
வா பெண்ணே...
சிரிப்போடும், சிறப்போடும்,
எழுச்சி கண்டேன்; நின் பிறப்பிலே
நிலமகள்; எங்கும் புன்னகை பூக்கட்டும்
வருகையை - வாழ்த்துகிறேன்,
பெண்ணே நீ வருக !!!
-
கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
19 Jan 2025
நன்றி பகலவா !!!...
தைத் திங்கள் தழுவியதமிழ் மகளின் தாலாட்டலில்ஈரைந்து மாதங்கள் சுமந்த,மேகக் கூட்டத்தில் ஓரமாய்ஒளிந்துக் கொண்டேவெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!சில மதங்க...
11 Jul 2020
மாற்றம் ஒன்றே மாறாதது......
மனிதர்கள், உண்மையிலே ஒரு அதிசய பிறவி.. சில வருஷத்துக்கு முன்னாடி, மக்களோட மனநிலை வேற,இப்போ வேற..மனிதனே, மிருகமாய் மாறிவிட்டாலும்..அதன் இரக்க...
18 Aug 2025
புதிதாய் ஒரு உலகம்...
பிரபஞ்சத்தின் பெரும் வெடிப்பு,இயற்கையின் சீற்றம்,மூச்சு திணறல்..உலகம் முழுவதும் இருண்டது..புதிதாய் ஒரு உலகம்;அங்கே,தீடிரென்று முளைத்த செடியில், வ...