மலர்களே மலர்களே
By Admin - 11 May 2024 581 0

மலர்களே மலர்களே
அழுகை வேண்டாம்...
வாடினால் வாடினால்
உதிர வேண்டாம்..
காலங்கள் கூடிவருமே,
ஒதுங்க வேண்டாம் - உன்
சிரிப்பிலே துளிர் விடுவாய்
கலங்க வேண்டாம்....
வருவதும், போவதும்
இயற்கையே - இதில்
நீயென்ன நானென்ன..
இந்த நொடியே,
இமைக்காமல் நீயே,
பார்த்திடு - உனக்கென்ன
நாள் வருமே நிமிர்ந்திடு...
தடங்கல் தடையுமும்,
பாதை மறுக்குமே - நீயே
எல்லாம் என்று மலர்வாயே...
போகும் பாதையும்
தூரமில்லையே - முட்களும்
நீண்ட வலியில்லையே...
விழியிலே ஈரம் வேண்டாம்,
வழியெல்லாம் பூக்களே,
வந்துவிட்டால் - நீ மேலே
வந்துவிட்டால் - போனதும்
உன்னை தேடுமே...
உனக்கான நேரம் வருமே...
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
19 Jan 2025
நன்றி பகலவா !!!...
தைத் திங்கள் தழுவியதமிழ் மகளின் தாலாட்டலில்ஈரைந்து மாதங்கள் சுமந்த,மேகக் கூட்டத்தில் ஓரமாய்ஒளிந்துக் கொண்டேவெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!சில மதங்க...
10 Jul 2025
நான் யார் ?
நான் யார் ?என் வாழ்க்கையில்,நான், ஒன்றும் எழுதப்படாத வெறும் காகிதம்..என்னை...கடந்தவர்கள், கடக்கின்றவர்கள், கடக்கப்போகிறவர்கள்காலம்...
09 Jun 2025
இரகசியம்
உள்ளே வெளியேபல முறை போய் வந்தாலும்வீட்டில் நடக்கும் இரகசியகங்களை வெளியே சொல்லாத ஒரே ஜீவன் என் வீட்டின் பல்லி......