மலர்களே மலர்களே
By Admin - 11 May 2024 580 0

மலர்களே மலர்களே
அழுகை வேண்டாம்...
வாடினால் வாடினால்
உதிர வேண்டாம்..
காலங்கள் கூடிவருமே,
ஒதுங்க வேண்டாம் - உன்
சிரிப்பிலே துளிர் விடுவாய்
கலங்க வேண்டாம்....
வருவதும், போவதும்
இயற்கையே - இதில்
நீயென்ன நானென்ன..
இந்த நொடியே,
இமைக்காமல் நீயே,
பார்த்திடு - உனக்கென்ன
நாள் வருமே நிமிர்ந்திடு...
தடங்கல் தடையுமும்,
பாதை மறுக்குமே - நீயே
எல்லாம் என்று மலர்வாயே...
போகும் பாதையும்
தூரமில்லையே - முட்களும்
நீண்ட வலியில்லையே...
விழியிலே ஈரம் வேண்டாம்,
வழியெல்லாம் பூக்களே,
வந்துவிட்டால் - நீ மேலே
வந்துவிட்டால் - போனதும்
உன்னை தேடுமே...
உனக்கான நேரம் வருமே...
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Jun 2021
மீனாவும் Middleclass அப்பாவும்...
கதைக்களம் - ஆரம்பம் - 1ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்ல...
12 Jan 2025
சிறந்த கவிதைக்காக பரிசு...
கன்னிமரா நூலகத்தில், இலக்கியச்சோலை நடத்திய கவியரங்கில், சிறந்த கவிதைக்காக பரிசு வழங்கப்பட்டது...இலக்கியச்சோலை ஆசிரியர் அய்யா தமிழினியின், இலக்கிய நண்ப...
20 Sep 2020
One of the special moments of ...
If there is a rewind button in life, I wish to freeze those special moments of my life. Life is a interesting game, we will not realize the impo...