வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!
By Admin - 04 Feb 2020 1099 0

துன்பமே இன்பத்தின் ஆரம்பம்,
இன்பமே துன்பத்தின் ஆரம்பம்,
இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை,
நம் – வாழ்நாளில்
இன்பம் இருக்கும் பொழுது,
துன்பம் வந்தால் தான் – அந்த
இன்பத்தின் அருமை தெரியும்;
துன்பப்பட்டு, இன்பத்தை அனுபவித்தால் தான்,
இன்பத்தின் சுகம் தெரியும் !!!
ஆசையே, பேராசைக்கு அறிகுறி – அந்த
ஆசையே துன்பத்திற்கும் அறிகுறி – அதற்கென்று
ஆசையே படக்கூடாது என்றில்லை – அளவோடு
ஆசைப்பட வேண்டும், அளவிற்கு மீறி ஆசைப்பட்டால் – அது
பேராசையாக உரு வெடுத்து விடும் – பின்னர்
அழிவை தேடி தரும் !!!
வாழ்க்கையில் ஒரு மனிதன் இன்பத்தையே
அனுபவிக்காமல் போகலாம் – அவன்
வாழ்க்கையில் துன்பப்பட்டு கொண்டிருப்பான்,
இன்பத்துக்காக காத்திருக்கமாட்டான் !!!
அவன் – தன் வாழ்க்கையில் இன்பம் கலந்த
துன்பத்தை கொண்டிருப்பான் – ஆனால் முழு
இன்பத்தை பெறமாட்டான் !!!
கடைசியில்,
இன்பம் அவனை தேடி வரும் பொழுது,
அவன் – பிண்டம் கொண்டு, பலர்
அன்னம் கொண்டனரோ !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
16 May 2020
என்றும் கற்பனையே !!!...
அழகான காலை பொழுது,சுவாசிக்க தூய்மையான காற்று,தித்திக்கின்ற அளவில்லாத தண்ணீர்,உண்ண உணவு,உடுத்த துணி,உண்மையான உழைப்பு,நல்ல எண்ணங்கள், போதுமான செல்வ...
23 Jan 2023
அன்புள்ள அம்மா...
அன்புள்ள அம்மா,உன்போல் யாருமில்லையே.என்னை - உன்போல் யாரும்அழைத்ததில்லையே..நான் சொன்ன முதல்கவிதையும் நீ - நான் எழுதிய முதல் தமிழும் நீ...அடிசில், ...
18 Jan 2023
அப்பா
உன் உயிரணுவில், என்னை நகலெடுக்க..நின் முதற் வங்கணம் நீயன்றோ..கருவறையில்,என்னை காணாது, நீ கொண்ட காதல்..அதன் யான் காணாமல், யாதனம் கொ...