விடை தேடி சென்றேன்
By Admin - 11 Jul 2020 848 0

விடை தேடி சென்றேன்,
வாழ்க்கையின் கேள்விகளுக்கு !!!
தெரு எங்கும்,
திரிந்து, தெரிந்து,
கொண்டது,
தெரு நாய்களின்,
பரி பாஷைகள்
அலைந்து, அலைந்து,
ஓய்ந்து, தேயந்தது,
காலணிகள் மட்டுமல்ல,
என் கால அணிகளும்
இந்த சூழலில்,
பஞ்சம் என்பது,
பசிக்கு மட்டுமல்ல - என்
வியர்வைக்கு கூட;
ஏனோ
இரக்கம் இல்லை...
வறண்ட சூழல் மட்டும்,
காணும் திசை எங்கும்
எதிர்கால கனவுகளும்,
இறந்தகால சுமைகளும்,
ஒன்றாய் அரங்கேற்ற,
வெறும் கனவாகி போகிறது,
என் நிகழ்காலம்
காலங்கள் ஓடிவிடும்,
நாம் வாழ நினைத்த,
நொடிகள் எல்லாம்
என்றும் கற்பனையே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
21 Jul 2025
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு...
*வான்புகழ் கொண்ட தமிழ்நாடு*தமிழகமாய் பிறந்து, தமிழ்நாடாய் வளர்ந்தஇயற்கை அன்னையின் பெருந் தாரகையே...மஞ்சளும், மங்களமும் உன் பிறப்பிடமே,மண்வாசை எங்கும் ...
03 Sep 2022
தள்ளாடுதே, உன்னாலே......
கண்ஜாடை பேசினாள்,காற்றின் மொழிகள்கேட்குதே..வதனம் மெருகும்ஆகுதே - வெட்கங்கள்நூறானதே...பார்க்க பார்க்கபிடிக்குதே,பழகி பார்க்கஏங்குதே,உள்ளூறுதே,மனம்தள்ளா...
09 Jun 2025
வாழ்க்கையின் அழகான சிற்றுணர்வு...
பாத்திரத்துக்கு தெரியாது உணவின் சுவை !!!-----பேசாத உறவிடம் மனம் விட்டு சில மணி நேரம்..கேட்டதோ என் மகளை பற்றி-----அப்பாவின் கைக்குள், என...