விடை தேடி சென்றேன்
By Admin - 11 Jul 2020 813 0

விடை தேடி சென்றேன்,
வாழ்க்கையின் கேள்விகளுக்கு !!!
தெரு எங்கும்,
திரிந்து, தெரிந்து,
கொண்டது,
தெரு நாய்களின்,
பரி பாஷைகள்
அலைந்து, அலைந்து,
ஓய்ந்து, தேயந்தது,
காலணிகள் மட்டுமல்ல,
என் கால அணிகளும்
இந்த சூழலில்,
பஞ்சம் என்பது,
பசிக்கு மட்டுமல்ல - என்
வியர்வைக்கு கூட;
ஏனோ
இரக்கம் இல்லை...
வறண்ட சூழல் மட்டும்,
காணும் திசை எங்கும்
எதிர்கால கனவுகளும்,
இறந்தகால சுமைகளும்,
ஒன்றாய் அரங்கேற்ற,
வெறும் கனவாகி போகிறது,
என் நிகழ்காலம்
காலங்கள் ஓடிவிடும்,
நாம் வாழ நினைத்த,
நொடிகள் எல்லாம்
என்றும் கற்பனையே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
24 Oct 2020
படத்தின் தலைப்பு.....
கதையும் உண்டு,திரைக்கதையும் உண்டு,யாவரும் கண்டதில்லை,பெரிதும் உணர்ந்ததில்லை..முன்னூறு நாட்கள் ஓடுகின்ற,வெற்றி காவியம்...ஒருவருக்காக இயங்கும்உலகின...
03 Feb 2020
My Love for writing !!!
When i was a kid I used to play in streets, fight with my siblings , watch tv. I also had an habit of reading weekly magazine (siruvar malar). I never...
05 Jul 2020
இரண்டும் ஒன்றாய் வாழ்க......
காதல் காமம் வேறுபாடு புரிய மறுக்கிறான், காம போர்வைக்குள், காதலை ஏனோ திணிக்காரன்இச்சை கொண்ட ஆசைக்கு விலைமகள் கேக்குதே, அதன் பெ...