Nice saying that Love is god
அன்பு பழகு, அன்போடு பழகு
By Admin - 26 Apr 2021 986 2

கடவுளின் பெயர்களில்
மதம் பிரிக்கப்பட்டதா,
மதங்களின் அடிப்படையில்
கடவுள் உருவாக்கப்பட்டதா;
சாதிகளின் தலைவனாய்
மதங்கள் உருவானதா,
மதங்களின் அடிப்படையில்
சாதிகள் பிரிக்கப்பட்டதா;
இதில் தலைவன் எவன் ?
கடவுளா,
மதமா,
சாதியா...
விடை தேடி சென்றேன்,
கண்டேன் - சற்றே அறைந்த
சுளீர் வெயிலை போல,
புதிதாக சில கதைகள்,
இவைகளின் சாயால் என்று சொல்லி,
நம்மை கடவுளிடம் சேர்க்கும்
தூதுவராக - பல குருமார்கள்;
கடவுளுக்கு ஏனோ - நம் குரல்
கேட்க மறந்த காரணம்...
இருந்தும் - ஓயவில்லை
கோயிலின் கூட்டம்...
துன்பம் தழுவுகின்ற நொடியில்,
கோயிலுக்கு சென்றேன்,
மதங்களின், சாதிகளின் அடிப்படையில்,
பல கடவுள் வீற்றிருக்க கண்டேன்,
அருகில் கடவுளின் நேரடி தூதுவரும்
கதைகள் சொல்ல கண்டேன்..
யாரை நம்புவது ?
கல் போன்ற
அழகிய சிலையா,
தத்துவங்கள், கதைகள்
சொல்லும் தலைவனா..
எதுற்கும், யாரோ ஒருவர்
துணை வந்தால் என்ன,
அனைவரையும் தொழுவோம்
என்று - பகுத்தறிவு மறந்து
சரணடைத்தேன்..
பல யுகங்கள்,
பல குருக்கள்,
பல மனிதர்கள்,
பல மிருகங்கள்,
பல யாகங்களும்,
பல வேதங்களும்,
பல தேசங்களும்,
ஒன்றாய் சொன்ன வார்த்தை
ஏனோ தெரியாமல்,
பகுத்தறிவு இல்லாமல்,
இன்றும் பொய்யாய் ஓடுகிறோம்...
சாதி என்பது;
கை அளவு நம்பிக்கை,
மதம் என்பது;
மனதோடு உள்ள நம்பிக்கை,
கடவுள் என்பது;
அன்பை போன்று,
தூணிலும் நேசி,
துரும்பிலும் நேசி..
அன்பு பழகு,
அன்போடு பழகு..
Add Your Comments
Say Something
Comments
from Chandramouli Subramanian at 2023-01-06 23:39:50
from Velmurugan Umapathy at 2021-06-12 06:28:33
from Velmurugan Umapathy at 2021-06-12 06:28:33
Nice...
See More Stories
05 Jun 2024
தூக்கம் வரலப்பா...
“என் ஆறு வயதில்அப்பா சொன்னார் கொஞ்சம் நேரம் தூங்குப்பா !!!தூக்கம் வரலப்பா ..அவர் சிரித்தார்..எழுபது வயதில்நான் சொன்னேன் கொஞ்சம் நேரம் தூங்கு...
22 Jun 2021
முத்துகாளையும், பருத்தியம்மாளு...
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை..அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில கு...
25 Jun 2025
தவறில்லை
நான் உழைத்தது தவறில்லை,என் உழைப்பை எங்கு போடவேண்டும் என்று தெரியாமல்உழைத்ததுதான் தவறு....- கல்யாணராமன் நாகராஜன் ...