அன்பு பழகு, அன்போடு பழகு

By Admin - 26 Apr 2021 932 2

கடவுளின் பெயர்களில் 
மதம் பிரிக்கப்பட்டதா,
மதங்களின் அடிப்படையில் 
கடவுள் உருவாக்கப்பட்டதா;

சாதிகளின் தலைவனாய் 
மதங்கள் உருவானதா,
மதங்களின் அடிப்படையில் 
சாதிகள் பிரிக்கப்பட்டதா;

இதில் தலைவன் எவன் ?

கடவுளா,
மதமா,
சாதியா...

விடை தேடி சென்றேன்,
கண்டேன் - சற்றே அறைந்த 
சுளீர் வெயிலை போல,

புதிதாக சில கதைகள்,
இவைகளின் சாயால் என்று சொல்லி,
நம்மை கடவுளிடம் சேர்க்கும்
தூதுவராக - பல குருமார்கள்;
கடவுளுக்கு ஏனோ - நம் குரல்
கேட்க மறந்த காரணம்...
இருந்தும் - ஓயவில்லை 
கோயிலின் கூட்டம்...

துன்பம் தழுவுகின்ற நொடியில்,
கோயிலுக்கு சென்றேன்,
மதங்களின், சாதிகளின் அடிப்படையில்,
பல கடவுள் வீற்றிருக்க கண்டேன்,
அருகில் கடவுளின் நேரடி தூதுவரும்
கதைகள் சொல்ல கண்டேன்..

யாரை நம்புவது ?

கல் போன்ற 
அழகிய சிலையா,
தத்துவங்கள், கதைகள் 
சொல்லும் தலைவனா..

எதுற்கும், யாரோ ஒருவர்
துணை வந்தால் என்ன,
அனைவரையும் தொழுவோம் 
என்று - பகுத்தறிவு மறந்து
சரணடைத்தேன்..

பல யுகங்கள்,
பல குருக்கள்,
பல மனிதர்கள்,
பல மிருகங்கள்,
பல யாகங்களும்,
பல வேதங்களும்,
பல தேசங்களும்,

ஒன்றாய் சொன்ன வார்த்தை
ஏனோ தெரியாமல், 
பகுத்தறிவு இல்லாமல்,
இன்றும் பொய்யாய் ஓடுகிறோம்...

சாதி என்பது;
கை அளவு நம்பிக்கை,
மதம் என்பது;
மனதோடு உள்ள நம்பிக்கை,
கடவுள் என்பது;
அன்பை போன்று,
தூணிலும் நேசி,
துரும்பிலும் நேசி..

அன்பு பழகு,
அன்போடு பழகு..

Add Your Comments

Say Something

 

Comments

from Chandramouli Subramanian at 2023-01-06 23:39:50

Nice saying that Love is god


from Velmurugan Umapathy at 2021-06-12 06:28:33

Nice...