அப்படிதான் பாட்டி

By Admin - 04 May 2021 840 0

பள்ளிகூடத்தின் 
வாசம் யில்லை,
மருத்துவமனைக்கு 
செல்ல வில்லை,
மருந்தகம் பற்றி 
அறிந்த தில்லை,
உணவே,
மருந்தாய் கொண்டாய்,
நோய் தடம் 
தெரிய வில்லை..
உலகத்தில் 
இன்றும் 
அறியப்படாத 
அறிவியல் ரகசியம்,
பாட்டி வைத்தியம்...

நீ யில்லை,
கதைகள் மறைந்தது,
வரலாறு மறந்து போனது,
அன்பும் மறந்து போனது,,,

அன்றே பிறந்த 
நொடி பொழுது, 
எல்லாரும் சிரித்தார்கள் 
என் அழுகையில், 
நீ மட்டும் நன்றி 
சொன்னாய் நம் 
குல தெய்வத்திற்கு..

சின்ன அழுகையோடு, 
குரல் கேட்க - நீ  
பிள்ளை ஈன்று கண்டதோடு 
கோடி சுகம் கொண்டாய்..
வலிகளில் ஈரம் யில்லை,
என்னை உன் பிள்ளை,
அடிக்கும் பொழுது,
கோடி வலி கொண்டாய்...

இன்றும் 
பல முறை,
விழுகிறேன்,
கை பிடிக்க,
நீயும் இல்லை;
ஒளிந்துகொள்ள,
உன் புடவையும் இல்லை..

குழந்தையும், 
தெய்வமும் ஒன்று, 
ஏனோ மறந்தார்கள்
அகவை கூடினால், 
மனதளவில் அவர்களும் 
குழந்தை தான்..
நீயும்,
அப்படிதான் பாட்டி !!!

Add Your Comments

Say Something

 

Comments

No comments.