நடைபயனம்

By Admin - 27 Jul 2025 271 0

**நடைபயனம்**

அந்த மேகக்கூடத்தின் மெத்தையில்,
அதிகாலை துயில் கலைந்து,
பறவைகளின் இசையில்,
மரங்களின் நிழல் என்னிடம் கதைகள் சொல்ல கண்டேன்..

திசைகள் பல அழைத்த பொழுது,
என் குரல் என்னிடம் பேசும் அதிசயம் கண்டேன்,
காலடி ஓசைகளும், இதய துடிப்பும் பேச கண்டேன்..
இயற்கையின் மொழிகள் இரசித்து கொண்டே,
அவளின் நினைவுகளும் வந்து போக,
என்னை மறந்து நடந்தேன்..

பயணம் என்பது ஒரு கதையல்ல,
புது அத்தியாத்தின் தொடக்கம்..
உடலுக்கும், உணர்வுக்கும்...

இந்த முடிவில்லாத பயணம்,
நான் கொண்ட தனிமையின் நடைபயனம்...

**- நா.கல்யாணராமன்**

Add Your Comments

Say Something

 

Comments

No comments.