மனமே
By Admin - 16 Apr 2023 573 0

தரை தொடும்
முகில் அழுவதில்லை..
நதி சேர்ந்து
கடல் கலந்து
மீண்டும் துளிரிதே..
அவ்,
விதி என்றோ
கலங்குவதில்லை ?
மதி கொண்ட
மானுடர்
மயங்குவதென்ன !!!
நீ செய்வதை - பிரித்து,
இடார் க்கொண்டு,
தீர்ப்பு சொல்ல வானத்தில்
யாரும் யில்லை...
சித்தாந்தம் அறியாய்,
அந்தம் அறியோம்
வேதாந்தம் அறியோம்,
அந்தம் அறியாய்...
நித்திரை கொள்ளாத
மனமே - நீ
சற்று ஓய்வு கொள்...
கன நொடியில்,
பல தூரங்கள்
செல்லும் உன்
வேகத்திற்கு - நீ
ஓய்வுகொடு....
வானில் வரும்
தாரகை தரை
தொடும் நொடியில்
நீ தொடா தூரத்தில்
சென்றுவிட்டால் - நான்
எந்த சிந்தனைக்கு
வேள்வி வைப்பேன் ?
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Feb 2020
வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!...
துன்பமே இன்பத்தின் ஆரம்பம், இன்பமே துன்பத்தின் ஆரம்பம், இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை, நம் – வாழ்நாளில் இன்பம் இருக்கும் பொழுது, த...
11 Oct 2020
எங்கே, நான் தேடுவேன்...
நொடி நேரம் என்னை;காணா விடில்வாசலில் வாடிடும் உந்தன்அழகிய முகம் - இனிஎங்கே, அந்த பாசத்தைநான் தேடுவேன்...சிறு காய்ச்சல் வந்து நான் துடிக்க - என்&nb...
05 Sep 2025
தலையணை
யாரிடமும் சொல்லாத கதை,மறக்க வேண்டிய இரகசியம்,அனைத்தும், புதைந்து போனதுதலையணையில்......