மனமே
By Admin - 16 Apr 2023 619 0

தரை தொடும்
முகில் அழுவதில்லை..
நதி சேர்ந்து
கடல் கலந்து
மீண்டும் துளிரிதே..
அவ்,
விதி என்றோ
கலங்குவதில்லை ?
மதி கொண்ட
மானுடர்
மயங்குவதென்ன !!!
நீ செய்வதை - பிரித்து,
இடார் க்கொண்டு,
தீர்ப்பு சொல்ல வானத்தில்
யாரும் யில்லை...
சித்தாந்தம் அறியாய்,
அந்தம் அறியோம்
வேதாந்தம் அறியோம்,
அந்தம் அறியாய்...
நித்திரை கொள்ளாத
மனமே - நீ
சற்று ஓய்வு கொள்...
கன நொடியில்,
பல தூரங்கள்
செல்லும் உன்
வேகத்திற்கு - நீ
ஓய்வுகொடு....
வானில் வரும்
தாரகை தரை
தொடும் நொடியில்
நீ தொடா தூரத்தில்
சென்றுவிட்டால் - நான்
எந்த சிந்தனைக்கு
வேள்வி வைப்பேன் ?
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Feb 2020
காலா....
காலா ! நீ சற்றே பொறுத்திரு,என் மகளை - ஒருமுத்தமிட்டு வருகிறேன்அதனாழி - அவள் உயிருள்ளவரை வாழும்......
21 May 2021
இறுதி நிமிடங்கள்...
வாழ்க்கையின் சுவாரஸ்யமே,தினமும்;கடந்துப் போகும் சாலை,பார்க்கும் மனிதர்,உலாவும் வீட்டின் அறைகள்,அணைக்கும் நெஞ்சங்கள்,அன்பு பொழியும் விழிகள்,சிரிக்கும் ...
29 Mar 2020
Lock Down is not Same for Ever...
The above image is completely true, if we are nested with a place with some stocks of foods then this 21 days is completely break for the faster ...