Very nice composition
மாய கண்ணன்
By Admin - 07 Sep 2022 889 1

கண்ணன்
தேடிய ராதை,
யமுனை யோரம்
வந்தாள்..
கண்கள் காய்ந்திட,
கால்கள் தேய்ந்திட,
பாவமாகி நின்றாள்..
மாய கண்ணன்
குழல் கேட்டதும்,
தன்னை மறந்து
பறந்தாள்...
மோக கடலில்
மூழ்கி - காதலாகி
போனாள்...
கண்ணனை கண்டதும்,
கண்கள் பேசிட
கைகள் தீண்டிட
தோளில் சாய்ந்து
மௌனமாகி சிரித்தாள்..
வீசும் தென்றலும்,
இவளை உரசிட,
மடந்தை போல
நடந்தாள்..
பாவை ராதை
சாய்ந்ததும்
கருங்குழல்
உரசிட,
கண்ணன்
காதல் என்று
சொன்னான்..
பேதை நெஞ்சம்
கொண்ட ராதை
கண்கள் கலங்கி,
கைகள் கோர்த்து
நதியோரம் நடந்து
போனாள்..
நிலவும், சூரியனும்
வானில் ஒரு சேர
வானம் சிரித்திட,
மழையோடு
இதயம்
கரைந்து
போனாள்..
Add Your Comments
Say Something
Comments
See More Stories
14 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 1 - 3கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 4கதைக்களம் - ஆரம்பம் - 5அந்த கடிதத்தில்,மீனா, ஒரு நாள் கண்டிப்...
17 Apr 2023
நீ யார்
உன்னை கண்டு உலகம் பிரமித்தால் - நீபெரியோன்..உன்னை கண்டு நீயே பிரமித்தால் - நீசிறியோன்..நீ யார் யென்று - இந்தஉலகம் முடிவு செய்யும்..ஆனால்...ம...
04 Feb 2020
வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!...
துன்பமே இன்பத்தின் ஆரம்பம், இன்பமே துன்பத்தின் ஆரம்பம், இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை, நம் – வாழ்நாளில் இன்பம் இருக்கும் பொழுது, த...