Very nice composition
மாய கண்ணன்
By Admin - 07 Sep 2022 796 1

கண்ணன்
தேடிய ராதை,
யமுனை யோரம்
வந்தாள்..
கண்கள் காய்ந்திட,
கால்கள் தேய்ந்திட,
பாவமாகி நின்றாள்..
மாய கண்ணன்
குழல் கேட்டதும்,
தன்னை மறந்து
பறந்தாள்...
மோக கடலில்
மூழ்கி - காதலாகி
போனாள்...
கண்ணனை கண்டதும்,
கண்கள் பேசிட
கைகள் தீண்டிட
தோளில் சாய்ந்து
மௌனமாகி சிரித்தாள்..
வீசும் தென்றலும்,
இவளை உரசிட,
மடந்தை போல
நடந்தாள்..
பாவை ராதை
சாய்ந்ததும்
கருங்குழல்
உரசிட,
கண்ணன்
காதல் என்று
சொன்னான்..
பேதை நெஞ்சம்
கொண்ட ராதை
கண்கள் கலங்கி,
கைகள் கோர்த்து
நதியோரம் நடந்து
போனாள்..
நிலவும், சூரியனும்
வானில் ஒரு சேர
வானம் சிரித்திட,
மழையோடு
இதயம்
கரைந்து
போனாள்..
Add Your Comments
Say Something
Comments
See More Stories
11 Jul 2020
விடை தேடி சென்றேன்...
விடை தேடி சென்றேன்,வாழ்க்கையின் கேள்விகளுக்கு !!!தெரு எங்கும், திரிந்து, தெரிந்து,கொண்டது,தெரு நாய்களின்,பரி பாஷைகள்அலைந்து, அலைந்து,ஓய்ந்து...
09 May 2024
அவன் ஒரு எழுத்தாளன்......
அவனுக்கு எழுத வேண்டும் என்று தோன்றுகிறது... காரணம், அவன் ஒரு எழுத்தாளன்...அவன் எண்ணங்களுக்கு அவனே ராஜா, அதற்கு அவனே இறைவன்... அந்த இறைவனும் இறங்கி பூம...
03 Mar 2024
துகள்
உன்னில் இருக்கும் அனைத்தையும் - நீ;உதறிவிட்டால்..எஞ்சுவது எதுவோ,அதுவே நீ !!!ஒரு சிறு துகள்.....