மாய கண்ணன்

By Admin - 07 Sep 2022 796 1

கண்ணன் 
தேடிய ராதை,
யமுனை யோரம் 
வந்தாள்..

கண்கள் காய்ந்திட,
கால்கள் தேய்ந்திட,
பாவமாகி நின்றாள்..

மாய கண்ணன் 
குழல் கேட்டதும்,
தன்னை மறந்து
பறந்தாள்...
மோக கடலில்
மூழ்கி - காதலாகி
போனாள்...

கண்ணனை கண்டதும்,
கண்கள் பேசிட
கைகள் தீண்டிட
தோளில் சாய்ந்து 
மௌனமாகி சிரித்தாள்..
வீசும் தென்றலும்,
இவளை உரசிட,
மடந்தை போல 
நடந்தாள்..

பாவை ராதை
சாய்ந்ததும்
கருங்குழல்
உரசிட,
கண்ணன்
காதல் என்று
சொன்னான்..

பேதை நெஞ்சம்
கொண்ட ராதை
கண்கள் கலங்கி,
கைகள் கோர்த்து
நதியோரம் நடந்து
போனாள்..

நிலவும், சூரியனும்
வானில் ஒரு சேர
வானம் சிரித்திட,
மழையோடு
இதயம்
கரைந்து 
போனாள்..

Add Your Comments

Say Something

 

Comments

from Meera ram at 2022-09-11 16:52:55

Very nice composition