Very nice composition
மாய கண்ணன்
By Admin - 07 Sep 2022 843 1

கண்ணன்
தேடிய ராதை,
யமுனை யோரம்
வந்தாள்..
கண்கள் காய்ந்திட,
கால்கள் தேய்ந்திட,
பாவமாகி நின்றாள்..
மாய கண்ணன்
குழல் கேட்டதும்,
தன்னை மறந்து
பறந்தாள்...
மோக கடலில்
மூழ்கி - காதலாகி
போனாள்...
கண்ணனை கண்டதும்,
கண்கள் பேசிட
கைகள் தீண்டிட
தோளில் சாய்ந்து
மௌனமாகி சிரித்தாள்..
வீசும் தென்றலும்,
இவளை உரசிட,
மடந்தை போல
நடந்தாள்..
பாவை ராதை
சாய்ந்ததும்
கருங்குழல்
உரசிட,
கண்ணன்
காதல் என்று
சொன்னான்..
பேதை நெஞ்சம்
கொண்ட ராதை
கண்கள் கலங்கி,
கைகள் கோர்த்து
நதியோரம் நடந்து
போனாள்..
நிலவும், சூரியனும்
வானில் ஒரு சேர
வானம் சிரித்திட,
மழையோடு
இதயம்
கரைந்து
போனாள்..
Add Your Comments
Say Something
Comments
See More Stories
06 Jul 2021
My Dear பொம்மை - இனிதான் ஆரம...
MY DEAR பொம்மை - தொடக்கம்My Dear "பொம்மை" - இனிதான் ஆரம்பம் டிங் டாங், டிங் டாங் என்று காலிங் பெல் கேட்டவுடன், மீனா ...
19 Sep 2021
படித்தவுடன் கிழித்துவிடவும்...
கற்கை நன்றே, கற்கை நன்றே,பிச்சை புகினும், கற்கை நன்றே..தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை,எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்..உண்மையில், இது போல் வரிகளும், தத...