தள்ளாடுதே, உன்னாலே...
By Admin - 03 Sep 2022 439 0

கண்ஜாடை பேசினாள்,
காற்றின் மொழிகள்
கேட்குதே..
வதனம் மெருகும்
ஆகுதே - வெட்கங்கள்
நூறானதே...
பார்க்க பார்க்க
பிடிக்குதே,
பழகி பார்க்க
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...
என் பெயரும்
மறந்து போனதே,
உன் முகவரி
என்ன தேடுதே,
கண்கள் தினம்
உன்னை பார்க்கவே,
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...
கைகள் பிடிக்க
தோணுதே,
நடையும் பழகி
போனதே,
காலம் மறந்து
போகுதே,
பாஷை மௌனம்
ஆகுதே,
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...
சிறிய சிறிய
ஆசைகள்,
சிறுக சிறுக
பெருகுதே,
உன்னை
காணும் நேரத்தில்,
நாணம் மறந்து
போகுதே,
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...
மஞ்சள் வெயில்
தேடினேன் - உன்
நிழலில் தூங்க
ஓடினேன்..
மீண்டும்
மீண்டும்
சிரிக்கிறேன்,
தனிமை தேடி
போகிறேன்..
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
18 Mar 2024
ஆசாமி
விபூதி, குங்குமம், பூ, கயிறு,பிரசாதம்எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..அவர்களிடம் ,சாமி விபூதி, சாமி குங்கு...
04 Feb 2020
வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!...
துன்பமே இன்பத்தின் ஆரம்பம், இன்பமே துன்பத்தின் ஆரம்பம், இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை, நம் – வாழ்நாளில் இன்பம் இருக்கும் பொழுது, த...
11 Sep 2022
வெள்ளை
சில நொடிகள் இமைக்காமல்,கடிகாரத்தின் முட்கள் நகர்வதை பார்க்கும் பொழுது காலத்தில் வேகத்தை கண்டு பயம் தொற்றி கொண்டது.....