very nice depiction
மாற வைக்கும் மாயை
By Admin - 28 May 2021 850 1

போதும் என்ற மனமே,
பொன் செய்யும் மருந்து,
உண்ணும் உணவு,
உடுத்தும் உடை,
காதல்,
அன்பு,
காமம்,
பெருமை,
புகழ்,
அனைத்திற்க்கும்
போதும் என்ற நிலை உண்டு,
ஏனோ விதிவிலக்கு
இதற்கு மட்டும்,
மனிதன் படைத்ததில்,
ஒரு அதிசயம்,
இதற்கு
ஜாதி இல்லை,
மதம் இல்லை,
இனம் இல்லை,
நல்ல வேலை,
மொழியும் இல்லை...
இருந்தால்,
இதற்கும் முத்திரை
கிடைத்திருக்கும்,
சாதிகளும்,
மத கடவுளும்,
போதகர்களும்,
போர் கோடி தூக்க.
இது என் இனமடா என்று !!!
ஏன்,
இதற்கு கண் கூட கிடையாது,
ஆனால்,
போகாத பயணம் இல்லை,
பார்க்காத இடம் இல்லை,
தேடினால் கிடைக்காது,
கிடைக்கும் பொழுது,
கிடைக்காது..
அது,
நினைத்தால் மட்டும்
உன்னை சேரும்..
சந்தோஷம்,
இன்பம்,
துன்பம்,
பேரின்பம்,
துயரம்,
வருத்தம்,
போராட்டம்,
இறுமாப்பு,
கஞ்சம்,
அதிகாரம்,
அடிமைத்தனம்,
பசி,
அழுகை,
சிரிப்பு,
நிம்மதி,
பயம்,
இது எல்லாம்
கை வந்த கலை..
யார்க்கு எங்கே
தர வேண்டுமோ,
அங்கே அவர்க்கு
அது கிடைக்கும்..
இருந்தாலும் நிம்மதி யில்லை,
இல்லாவிடில் நிம்மதி யில்லை
அனைத்திலும்
ஜாதி, மதம்
பார்ப்பவன்,
இதற்கும் மட்டும்
பல்லை காட்டுவான்..
இதற்கு மட்டும்,
பேச தெரிந்தால்,
நினைத்தாலே
கற்பனைகள்,
கடல் போல்
அலை ஆடுகிறது..
சில இடங்களில்
சிரித்திருக்கும் - பல
இடங்களில் அழுதிருக்கும்,
கரம் நீட்டினால்,
மேலும் சேர்ந்து யிருக்கும்,
ஒரு இடத்தில்,
அடைத்து வைக்காமல்,
புழங்கி இருக்குமோ,
இருக்கும் இடத்தில்
இருக்குமா - இல்லாத
இடத்தில் சேருமா..
அரைஜான் வயித்துக்கு,
தினம் கூத்து நடக்கும்,
அது இல்லாமல் - பல வீடு
அரை கயிறில் தொங்கும்.
குணம் மாறும்,
இது மாறாது,
ஆனால்,
மாற வைக்கும்
மாயை இந்த
பணம் !!!
Add Your Comments
Say Something
Comments
See More Stories
13 Apr 2024
பாசம்
ஹைக்கூ....தாயிடம் பால் குடித்ததால்,தாயிடம் பாசம் இருந்தது...புட்டி பால் யென்று பிறந்ததோ,பாட்டில் மீது பாசம் வந்தது...- கல்யாணராமன் நாகராஜன்...
04 Jul 2020
தாத்தா...
ஒரு கோடி நூலகத்துக்கு சமம்,என் தாத்தாவின் சின்னஞ்சிறு உரையாடல்..விடுமுறை நாட்களில், வேடந்தாங்கல் போல மாறியது;தாத்தாவின் வீடு..இதன் அருமை தெர...
26 May 2025
நீர் என்றுமே.......
தரை தொடும் முகில்அழுவதில்லை,போகும் திசையெல்லாம்அமுதமாய் துளிர்கிறது...மலையின் மடியிலேதாய் போல பாயும் அருவி,சிறு ஓடையின் ஓசையில்,தாகம் தீர்க்கும் நதியி...